Skip to main content

தேச நலன் காப்போம் என தேசிய கொடியுடன் நடைபயணம் செல்லும் உ.பி இளைஞர்: மதுரையில் உற்சாக வரவேற்பு

இந்திய தேசம் வலிமையுடன் முன்னேறவும்,இளைஞர்கள் வளம் பெற, தேச நலனுக்காக உத்திரப்பிரதேச மாநிலம், பதேபூர் கிராமத்தை சேர்ந்த  34வயதான சிவசேவாக் சிஷ்கரன் சிங், நாட்டின் மீது பற்று கொண்டவரான இவர் கடந்த 2009 ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடைபயணம் செய்து பல இடங்களில்  இளைஞர்களை சந்தித்து நல்ல கல்வி கற்று நம் நாடு வலிமை மிக்க  தேசமாக திகழ ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பேசி நடை பயணம் சென்றார், இது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றது, 

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் நடை பயணம் சென்று தேச நலன் போற்று வோம் என்ற முழக்கத்துடன்  கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் நடை பயண யாத்திரை தொடங்கினார் இதில் முதலில் வடக்கே உத்திர பிரதேசத்தில் ஆரம்பித்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலம் வழியாக நடை பயணம் சென்று பின், பஞ்சாப், டெல்லி சென்று ஜம்மு காஷ்மீர் சீனா எல்லை பகுதி வரை நடந்து சென்று பாது காப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். 
இதை தொடர்ந்து  தெற்கே கர்நாடகா மாநிலம், தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்தில் நடைபயண யாத்திரை மேற்கொண்டவர் திருவண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கம், பதுக்கோட்டை, காரைக்குடி ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் சென்று தேசிய கொடியுடன் கடலில் நீராடி கோவிலில் ராமநாத சுவாமி, பவதாரணி அம்மனை தரிசனம்  செய்தார். இதன் பின்னர் தனுஷ்கோடி வரை நடந்து சென்று அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகளிடம் இந்திய நாட்டை வலிமையாக்க படிப்புடன், விஞ்ஞானம், தொழில் வளர சுய ஒழுக்கத்துடன் முன்னேற வேண்டும் என பேசினார்.
இதனைஅடுத்து கன்னியாகுமரியில்  விவேகானந்தர் தவம் செய்த பாறைக்கு சென்று வணங்கி பின் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை வந்து வாடிப்பட்டி செல்ல சமயநல்லூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் தேசிய கொடியுடன் நடந்து சென்ற வாலிபரை கண்ட இளைஞர்கள் கைதட்டி வரவேற்றனர், இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்க்கூறிய தகவல்களை  கூறினார். இதனைதொடர்ந்து நடை பயண யாத்திரை தொடங்கியவர், பழனி, பொள்ளாச்சி வழியாக கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம் சென்று தனது தேச நலனுக்காக சென்ற நடை பயண யாத்திரையில் இதுவரை 18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்தாகவும், இன்னும் 3 அல்லது நான்கு மாதங்களில் நடை பயண யாததிரை எனது கிராமத்தில்  நிறைவு செய்வதாக தெரிவித்தார். மேலும் பேசுகையில்  ஆற்றலும், நாட்டின் மீது விசுவாசம் கொண்ட இளைஞர்களின் பங்களிப்பும்,  அழியாத துணிச்சலான தியாகிகளும் தேசத்தின் எழுச்சி மிக்க நாடாக வளர்நது உயர்ந்தும்,  உயிரினங்கள் விலங்குகள் சுற்றுச்சூழல் இயற்கை வளங்கள் இவை நமக்கு இயற்கை தந்த கொடை ஆகும், அதே போல  முப்படை வீரர்கள் நம் தேசத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.என்றார். . குடும்பங்களை துரந்து ராணுவ வீரர்கள் கூட்டுப்பணி நாட்டிற்கு மிக மிக தேவை. முழுமையான செயல்திறன் எப்பொழுதும் நமக்கு  வெற்றியைத் தரும். அதுவே  நாட்டிற்கும் வேண்டும், இதை  கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நாம் ஒற்றுமையுடன் நம் தேச நலன் காப்போம் என்று பேசியவர்,  ஜெய்ஹிந்து என விடை பெற்றார். தேசபக்தர் சிவசேவக் ஷிவ்கரன் சிங் உத்திரபிரதேசம் ,அவரை வாழ்த்துக்கள் கூற, பேசவும்  9682186213 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments