சோழவந்தான், தென்கரை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீமூலநாத சுவாமி கோவிலில், முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவ விழா
மதுரை, நவ.8-
மதுரை மாவட்டம், சோழவந்தான், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தென்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ விழா கமிட்டியினர், மற்றும் முருக பக்தர்கள் சார்பில் 13.-ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் மற்றும் முருகபெருமானுக்கு திருக்கல்யாணம் உற்சவ விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி பக்தர்கள் காப்பு கட்டி
விரதம் இருந்து முருகன் பரஸ்சுரம் பாடல் துதிபாடி, கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்புறம் உள்ள இடத்தில் சூரபத்மனை வதம் செய்யும். சூரசம்ஹாரம் நிகழ்வு நடந்தது. முன்னதாக அன்னை பராசக்தி தேவியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்வும்.நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வணங்கினர், அதன் பின் சுவாமிக்கு தீபாராதனைகள் காட்டி விபூதி பிரசாதம் வழங்கினார்கள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் ,முருகபெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8.11.2024 அன்று நடந்தது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள் கண்ணன் செந்தில் பூஜிக்கப்பட்ட திருமாங்கல்யத்தை உற்சவ மூர்த்திகளான தெய்வானை முருகனுக்கு பூ மாலையும், திருமங்கல்யத்தையும் அணிவித்தனர். முன்னதாக யாக பூஜை நடந்தது பின்னர் அலங்கரிக்கபட்ட முருகன் வள்ளி தெய்வனைக்கு தீபாராதனைகள் நடந்தது அப்போது கோவில் உற்சவ மூர்த்திகளான அகிலாண்டேஸ்வரி, சிவபெருமானும் கல்யாண வைபவ நிகழ்ச்சியில் காட்சி தந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயறு, முருகன், தெய்வானை படம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் பிரதோஷ விழா கமிட்டியினர் மற்றும் முருக பக்தர்கள் செய்து இருந்தனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments