தேனி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 30 மனுக்களுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தலைமையில் தீர்வு
தேனி, நவ.14-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் கே.திருமலைமுத்து, ஐ.சி.எல்.எஸ். (ஓய்வு) அவர்கள் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 30 மனுக்களுக்கு இன்று (14.11.2024) தீர்வு காணப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். அதேபோல, மனுதாரர் தனக்கு வழங்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று கருதினால் மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவலை கோரலாம்.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மதுரை மற்றும் தேனி ஹாஜி கருத்த இராவுத்தர் ஹௌதியா கல்லூரி, இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) போன்ற பொது தகவல் அலுவலர்களிடம் அளிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட 30 மனுக்களுக்கு. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் கே.திருமலைமுத்து. ஐ.சி.எல்.எஸ். (ஓய்வு) அவர்கள் தலைமையில் இன்று விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments