தேனி, நவ.8-
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி காமராஜர் நகர் முத்துத்தேவன்பட்டி பள்ளியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழா போட்டிகள் 8.11.2024 அன்று நடைபெற்றது. போட்டிக்கு தே.மே.இ.நா. உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவ், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சண்முகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் உள்ள 23 பள்ளிகளை சேர்ந்த சுமார் 850 மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும், போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி செயலாளர்
R.K.பாலசரவணக்குமார்,
இணைச்செயலாளர்கள் K.வன்னியராஜன், .D.அருண்குமார், பள்ளி முதல்வர் R.M.ராஜேஸ்வரி மற்றும் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரிய,
ஆசிரியைகள் செய்திருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments