தேனி, நவ.15-
தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் எம்.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, பிரகாஷ், கந்தவேல், சங்கீதா, மாலா, கவிதா, தனலட்சுமி, நாகலட்சுமி, அன்புமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் கிருஷ்ணவேணி, உதவி பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சுபா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 27 கூட்டப் பொருள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் முன் மாதிரியாக தேனி ஊராட்சி ஒன்றியக்குழு செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித கட்சி பாகுபாடும் இன்றி அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து குறைபாடு இன்றி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் நமது ஒன்றிய குழுவிற்கு கடைசி கூட்டமாக இருக்கும் என்று ஒன்றிய குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி பேசினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments