Skip to main content

தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

தேனி, நவ.14-

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 14.11.2024 வியாழக்கிழமை அன்று குழந்தைகள் தினவிழா  கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். 

உறவின்முறை உபதலைவர் P.P. கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 
தேனி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் உதவி மேலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழா ஏற்பாடுகளை வித்யாலயா பள்ளி செயலாளர் V.நவமணி, இணைச்செயலாளர்கள் S.அய்யன் மூர்த்தி, L.G.S.தீபக்கணேஷ், பள்ளி முதல்வர் பூரண செல்வி, துணை முதல்வர் அனுஷா ஆகியோர் செய்திருந்தனர். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. 

விழாவில் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், உறவின்முறை சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். 

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments