Skip to main content

தேனி அருகே உள்ள மணி நகர் பூங்கா பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா: தேனி எம்.பி., துவக்கி வைத்தார்

தேனி, நவ.18-

தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம்  ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா 18.11.2024 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி உதவி வனபாதுகாவலர் செசில் கில்பர்ட், தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி (கிராம ஊராட்சி), ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் மற்றும் சுப்பிரமணி மணி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் போது வேம்பு, புங்கை, பாதாம், பூவரசு, நாவல் ஆகிய 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேனி வனச்சரகர் சாந்தகுமார், வனவர் பாண்டியராஜன், வனகாவலர் வேலுச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
.

Comments