Skip to main content

Posts

Showing posts from September, 2024

நாடார் சரசுவதி கலை கல்லூரியில் கலாசங்கமி-24 நுண்கலை விழா

தேனி, செப்.30- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசங்கமி-24 நுண்கலை விழா 30.9.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ் பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார். கல்லூரி இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, அகடமிக் டீன் முனைவர் கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் நுண்கலை விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வபிரியா நுண்கலை விழா பற்றிய அறிக்கையை வாசித்தார்.  விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், அனைவரும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும். இன்று நீங்கள் செய்யும் நுட்பமான முயற்சிகள் தான் உங்கள் எதிர்கால வெற்றியின் அடிப்படையாக இருக்கும்.  எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் உங்களை வலுப்படுத்து...

தேனியில் விஸ்வகர்ம முப்பெரும் விழா

தேனி, செப்.30- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கத்தின் சார்பில் மக்கள் மன்றம் தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் கலெக்டர் அலுவலகம் எதிரே கட்டப்பட்டுள்ளது. இந்த விஸ்வகர்ம மக்கள் மன்றம் திறப்பு விழா, விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா 29.9.2024 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஜெயச்சந்திர ஸ்தபதியார், தொழிலதிபர்  மகேந்திரன், விஸ்வகுல மத்திய சங்க தலைவர் சொக்கர்ராஜ், ஓய்வு பெற்ற கமிஷனர் ராஜேந்திரன்,  போடியை சேர்ந்த சங்க தலைவர்கள் சேகர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் மன்றத்தை தொழிலதிபர் ரத்தினம் திறந்து வைத்தார். மக்கள் மன்றத்தின் உணவு கூடத்தை தொழிலதிபர் சந்திரன் திறந்து வைத்தார். விஸ்வகர்ம கொடியை சங்கத்தின் செயல் தலைவர் விஸ்வா பில்டர்ஸ் பாலமுருகன் ஏற்றி வைத்தார்.  விழாவின் போது விஸ்வகர்ம சமுதாய பெண்கள் ராஜேஸ்வரி, தனலட்சுமி, ஆவுடைத்தங்கம், வேலுமணி  தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். விழாவில் ஶ்ரீலஶ்ரீ சிவசண்முகசுந்தரப...

தேனியில் டார்லிங் புதிய ஷோரூம் திறப்பு விழா

தேனி, செப்.29- தமிழ்நாடு ஹோட்டல் அசோசியேசன் நிர்வாக இயக்குனர் டார்லிங் குழுமம் தலைவர் வெங்கட் சுப்பு சார்பில் தேனியில் டார்லிங் புதிய ஷோரூம் திறப்பு விழா 29.9.2024 அன்று நடைபெற்றது.  இந்த புதிய ஷோரூமை கட்டிட உரிமையாளர் நல்ல கழுவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் . விழாவின் போது தேனி ஸ்ரீ கௌமாரியம்மன் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுதாகர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் திருவரங்கபெருமாள், தேனி நகர முதன்மை துணை தலைவர் விஷ்வல் பிரபு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். விழாவில் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுரை விற்பனை துணை பொது மேலாளர் கிருஷ்ணசுமன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழாவில் தேனி மாவட்ட ஹோட்டல் சங்க நிர்வாகிகள், தேனி நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஷோரூமில் எல்.இ.டி., டிவி, லேப்டாப், மொபைல், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி உள்பட வீட்டு உபயோக பொருட்கள் திறப்பு விழா சலுகை விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆர்...

நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேவ்ஸ்-24 கலை பண்பாட்டு நிறைவு விழா

தேனி, செப்.28- தேனி அருகே உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ் 24 பண்பாட்டு நிகழ்ச்சி 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா 28.9.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மதளைசுந்தரம்  வரவேற்புரை ஆற்றினார். விழாவின் போது நடந்த கலை நிகழ்ச்சியில் மியூசிக்கல் ரேப்சோடி, நீயா நானா, கொரியோபூம், மைம் ஒடிசி நாட்டுப்புற நடனம், பாட்டு போட்டி, கவிதை போட்டி, நடனப்போட்டி, மல்டிமீடியா, பேஸ் பெயிண்டிங், ஆர்ட் பிரம் வேஸ்ட், கோலப்போட்டி, வெஜிடேபிள் மற்றும் புரூட் கார்விங், மெகந்தி போட்டி, பொக்கை மேக்கிங், ப்யர்லெஸ் குக்கிங், கிளே மாடலிங் கிளாஸ் பெயிண்டிங்,சிகை அலங்காரம், ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கேலக்டிக் ஸ்டார்ஸ், புளு பிளாஸ்ட்டாஸ், வைலட் வைப்பர்ஸ், ரோசி ரைடர்ஸ். பீனிக்ஸ் பிளாஸ்டர்ஸ், டைகர் தராசர்ஸ், டிராகன் வாரியர்ஸ் டைனோ தண்டர்ஸ் ஆகிய 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட...

உலக இருதய தினத்தையொட்டி கோவையில் இருதய விழிப்புணர்வு ஊர்வலம்

கோவை, செப்.28- உலக இருதய தினம் ஆண்டுதோறும் செப் 294ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா  கொடி அசைத்து தொடக்கி வைத்தார்  இதில் விழிப்புணர்வு உரை யாற்றிய முதல்வர் நிர்மலா, உடலின் முக்கிய உறுப்பான இருதயம், உடலில் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால், புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இருதய நோய் ஏற்படுகிறது. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இருதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இது உலக அளவில் ஏற்படும் உயிரிழப்பில் 5 இல் ஒன்றாகும். தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 50% இருதய நோய் பாதிப்பால் மட்டும் ஏற்படுகிறது. எனவே ஆரோக்கியமான உணவு சீரான உடற்பயிற்சி மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்றார்  கோவ...

நாடார் சரசுவதி கலை கல்லூரியில் காலேஜ் பஜார் விற்பனை கண்காட்சி - 2024

தேனி, செப்.27- தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை; துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் “விற்பனை கண்காட்சி 2024” (காலேஜ் பஜார் 2024) 27.9.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் காசி பிரபு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்லூரி இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன் துவக்க உரை ஆற்றினர். கல்லூரி துணை முதல்வர்கள் கோமதி, சரண்யா, உமா காந்தி, கிருஷ்ணவேணி, விடுதி காப்பாளர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த கல்லூரி சந்தையில்  75 கடைகள் இடம் பெற்றன. இந்த கடைகளில் ஆடைகள், கைவினைப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன அடங்கிய கடைகள் அமைந்திருந்தன. இந்த கல்லூரி சந்தை கண்காட்சியை கல்லூரி மாணவியர்களும், பேராசியர்களும் உற்சாகத்துடன் பார்வையிட்டு பொருட்களை வாங்கி ...

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் வேவ்ஸ்-24 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா

தேனி, செப்.27- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ்'-2024 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா நடைபெற்றது.. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ்., பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார். மகேஸ்வரன் இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், மற்றும் தமிழ்  ஆராய்ச்சியாளருமான மதுரை தமிழ் இளவல் ராமகிருஷ்ணன்ன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னம்பிக்கை மூலம் மட்டுமே வாழ்வில் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற முடியுமென்றும், இளம் தலைமுறையினர் தோல்விகளை சந்திக்க கற்றுக் கொள்ளுவதன் மூலம் பல சிறந்த வெற்றிகளை அடைய முடியுமென்றும், பொறியியல் பட்டதாரிகள் தங்கள் துறை சார்ந்த திறமைகளோடு ஆங்கில மொழி திறமையை வளர்த்து கொள்ளுதல், பொறியாளர்கள் தங்கள் அறிவின் மூலம் நவீன உலகத்தை உருவாக்கி வருகின்றனர். சமூ...

தேனி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை : கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார்

தேனி, செப்.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 26.9.2024 அன்று குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி  வைத்தார் கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு, நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணியாக விளங்கி வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள்,  காஞ்சி க...

ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மண் விலை திடீர் ஏற்றம்: தேனியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.26- தேனி மாவட்டத்தில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மண், பி.சாண்ட் மண் விலையை திடீரென உயர்த்தி உள்ளதாக கூறி டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் கடந்த 19-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து கடந்த 23-ம் தேதி தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் பிறகு கிரஷர் உரிமையாளர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விலை குறைப்பிற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், கட்டிட பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 25.9.2024 அன்று தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ள இந்த திடீர் விலை ஏற்றத்தால் எவ்வாறெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராஜா, மகேந்திரன், வேல்மணி, காஜா...

கோவை அருகே மக்கள் பாதுகாப்பு உரிமைகள் இயக்கத்தின், சமூக தேவை குறித்த கூட்டம்

கோவை, செப்.23- கோவை, பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடை கிராமத்தில், மக்கள் பாதுகாப்பு உரிமைகள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் அமிர்தா பாலசுப்ரமணியம் தலைமையில் சமூக நலன் சார்ந்த தேவைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் இயக்கத்தின் தலைவர் ருக்மணி தேவி, செயலாளர் வக்கீல்  முத்துக்குமார், பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு தலைவர் உடுமலை சிவக்குமார், முதன்மை செயலாளர் நைனா முகமது, வழக்கறிஞர் ரவி, மகளிர் அணி மாநில தலைவர் பிரேமா, கோவை குமார், சேது என்று முத்துராமன், செல்வராஜ் ,நித்யா, சரண்யா மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அவசர தேவையான ஆம்புலன்ஸ், ஃப்ரீசர் பாக்ஸ் இலவசமாக ஏற்பாடு செய்திடவும், அதே போன்று விரைவில் கிராம மக்களின் குழந்தைகளிடம்  விளையாட்டு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கலாம், சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பாட வகுப்புகள் நடத்துவது என்றும், ஒவ்வொரு மாதம் ஒரு முறை  கிராமங்களுக்கு சென்று தேவையான உதவிகள் செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது, சீனிவாசன், உதவி ஆசிரியர் 

கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களால் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மண் திடீர் விலை ஏற்றம்: டிப்பர் லாரி உரிமையாளர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, செப்.24- தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் செயலாளர் காஜா மைதீன் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறோம். தேனி மாவட்டத்திலும், தேனி மாவட்டம் அருகே உள்ள அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கும் கட்டுமான பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்ள கிரஷர்களில் இருந்து எடுத்துச் சென்று விற்பனை செய்து கொண்டு வருகிறோம்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்படும் வைகை கல் குவாரி மற்றும் ஜல்லி கிரசர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு விலையேற்றம் செய்தனர். இதுவரை கடந்த ஒரு ஆண்டுகளில் மூன்று முறை விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் யூனிட் ஒன்றுக்கு ரூ.200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு ரூ.3000 இருந்த எம்.சாண்ட் 4000 ரூபாயாகவும், ரூ.4000 இருந்த பி.சாண்ட...

தேனியில் இயற்கை வேளாண் கருத்தரங்கம்

தேனி, செப்.23- தேனி நீராணிக்கர் அறக்கட்டளை, நன்செய் அறக்கட்டளை, அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் இயற்கை வேளாண் கருத்தரங்கம் மற்றும் விதைத்திருவிழா தேனியில் உள்ள என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் 22.9.2024 அன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு துணிப்பை இயக்கம், சுற்று சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா தலைமை தாங்கினார். மகாத்மா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேரரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சிவபிரசாத் கலந்து கொண்டு கருத்தரங்கினை துவக்கி வைத்து இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு கேடயம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  கருத்தரங்கில் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விதை யோகநாதன், தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன், தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன், தமிழக தேசிய விவசாய சங்க தேனி மாவட்ட தலைவர் சீனிராஜ், ஒட்டன்சத்திரம் ஆதியகை மரபு விதைகள் மையம் பரமேஸ்வரன், டி.மீனாட்சிபுரம் விவசாய நலச்சங்கம் நம்மாழ்வார், கம்மவார் சங்க செயலாளர் சீனிவாசன், கோட்டூர் ஆசிரியர் மனோஜ், நன்செய் அறக்கட்டளை பசுமை செந்தில், ஈரோடு வருமானவரி...

வாசவி கிளப் சார்பில் ஆணி பிடுங்கும் திருவிழா 4.0

தேனி, செப்.22- தேனி அருகே உள்ள மதுராபுரி நகரில் தேனி வாசவி கிளப், தேனி வாசவி கிளப் வனிதா, தேனி மாவட்ட நன்செய் அறக்கட்டளை சார்பில் ஆணி பிடுங்கும் திருவிழா 4.0 மற்றும் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இணைந்து ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு தேனி வாசவி கிளப் தலைவர் பாலகண்ணன், தேனி வாசவி கிளப் வனிதா தலைவி நாக கௌரி சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.  தேனி வாசவி கிளப் செயலாளர் மூன் டி.வி., சரவணன் , தேனி வாசவி கிளப் வனிதா செயலாளர் ஜீவிதா லோகேஷ், நன்செய் அறக்கட்டளை நிர்வாகி பசுமை செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணிப்பை இயக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் பெரம்பலூர் ரமேஷ் கருப்பையா, வாசவி கிளப் ஜோன் சேர்மன் சுவாதி ஸ்ரீ சரவணகுமார், வாசவி கிளப் முன்னாள் தலைவர்கள் நாகராஜன், சரவணகுமார், ஆசிரியை முத்துக்குமர நாயகி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தனர்.  நிகழ்ச்சியின் போது ஆயிரம் பனை விதைகள் நடு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி வாசவி கிளப்...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தேனி, செப்.22- தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 21.9.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரியின் முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரை ஆற்றி கல்லூரியின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் கோவா, தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் சென்னை இண்டோமர் கோஸ்டல் ஹைட்ராலிக்ஸ், நிர்வாக இயக்குநருமான டாக்டர். பொன்னம்பலம் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசு திட்டங்களை பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக உருவாக வேண்டுமென்றும், அறிவை மூலதனமாக கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு, கடின உழைப்புடன் செயல்பட்டால் பணிபுரியும் இடங்களில் தங்கள் து...

நாடார் சரசுவதி கலை கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுவதற்கான AI டூல்ஸ் பற்றிய பயிற்சி பட்டறை

தேனி, செப்.20 தேனியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டில் துறையின் சார்பாக “ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுவதற்கான ஏஐ டூல்ஸ்" என்ற தலைப்பில் 19.9.2024 மற்றும் 20.9.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.  கல்லூரியின் செயலாளர் காசிபிரபு வரவேற்புரை ஆற்றினார். இப்பயிற்சி பட்டறையில் கணினி பயன்பாட்டியல் துறையை சார்ந்த முதுகலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு 211 மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பயிலரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின் முறையின் உப தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். கல்லூரியின் இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லூரியின் முதல்வர் முனைவர் சித்ரா மற்றும் துணை முதல்வர்கள் முனைவர் கோமதி. சுசிலா சங்கர், முனைவர் சரண்யா. முனைவர்.உமாகாந்தி, முனைவர்.கிருஷ்ணவேணி மற்றும் விடுதி காப்பாளர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி கணினி பயன்பாட்டியல்துறை துணை பேராசிரியர் முனை...

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

தேனி, செப்.20- தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் தங்கதமிழ்செல்வன் எம்.பி., தலைமையில், மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் 20.9.2024 அன்று நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசினை சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை கண்காணித்து, அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சிகள்இ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, முன்னோடி வங...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி : 36 மணி நேரம் நடந்தது

தேனி, செப்.20- தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 19.9.2024 மற்றும் 20.9.2024 ஆகிய 2 தினங்கள் (36 மணி நேரம்) நடைபெற்றது.  இந்த போட்டிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டிக்கு அமெரிக்கா டெஸ்லா சைபர் செக்யூரிட்டி. தலைமை நிர்வாக அதிகாரி வரதராஜ் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பொறியியல் துறைகளில் எதிர்கொள்ளும் தேவைகளுக்கான தீர்வினை (Problem Solving) அளிக்கும் கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேசன் செக்யூரிட்டி, இன...