தேனி நீராணிக்கர் அறக்கட்டளை, நன்செய் அறக்கட்டளை, அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் இயற்கை வேளாண் கருத்தரங்கம் மற்றும் விதைத்திருவிழா தேனியில் உள்ள என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் 22.9.2024 அன்று நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு துணிப்பை இயக்கம், சுற்று சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா தலைமை தாங்கினார். மகாத்மா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேரரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு கருத்தரங்கினை துவக்கி வைத்து இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு கேடயம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விதை யோகநாதன், தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன், தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன், தமிழக தேசிய விவசாய சங்க தேனி மாவட்ட தலைவர் சீனிராஜ், ஒட்டன்சத்திரம் ஆதியகை மரபு விதைகள் மையம் பரமேஸ்வரன், டி.மீனாட்சிபுரம் விவசாய நலச்சங்கம் நம்மாழ்வார், கம்மவார் சங்க செயலாளர் சீனிவாசன், கோட்டூர் ஆசிரியர் மனோஜ், நன்செய் அறக்கட்டளை பசுமை செந்தில், ஈரோடு வருமானவரித்துறை துணை ஆணையர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் நகராட்சி கவுன்சிலர் கடவுள், சிறகுகள் ஜிம் நிர்வாகி வேங்கையன், சமூக ஆர்வலர் அன்பு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் போது இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் மற்றும் விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் பார்வையிட்டனர்
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணிப்பை இயக்கம் சார்பில் நாட்டு விதைகள் வழங்கப்பட்டது. முடிவில் வக்கீல் ஆசை சிவக்குமார் நன்றி கூறினார்
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments