Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தேனி, செப்.22-

தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 21.9.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கல்லூரியின் முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரை ஆற்றிகல்லூரியின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் கோவா, தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் சென்னை இண்டோமர் கோஸ்டல் ஹைட்ராலிக்ஸ், நிர்வாக இயக்குநருமான டாக்டர். பொன்னம்பலம் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசு திட்டங்களை பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக உருவாக வேண்டுமென்றும், அறிவை மூலதனமாக கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு, கடின உழைப்புடன் செயல்பட்டால் பணிபுரியும் இடங்களில் தங்கள் துறை சார்ந்த பணிகளில் சிறந்து விளங்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

மேலும் பொறியியல் பட்டதாரிகள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தகுந்தவாறு தயார்படுத்தி கொண்டு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டுமென்றும், டிஜிட்டல் உலகில் இந்திய சமுதாய கலாச்சாரத்தை பாதுகாத்து தொழில்நுட்ப அறிவை பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்கு துணைபுரிய வேண்டுமென்றும் சிறப்புரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து விழாவில் 142 இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவ மாணவியருக்கு பட்டய சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்லூரி நிர்வகக்குழு உறுப்பினர்கள். முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ், மகாலட்சுமி, சிவகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments