Skip to main content

நாடார் சரசுவதி கலை கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுவதற்கான AI டூல்ஸ் பற்றிய பயிற்சி பட்டறை



தேனி, செப்.20

தேனியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டில் துறையின் சார்பாக “ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுவதற்கான ஏஐ டூல்ஸ்" என்ற தலைப்பில் 19.9.2024 மற்றும் 20.9.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. 

கல்லூரியின் செயலாளர் காசிபிரபு வரவேற்புரை ஆற்றினார். இப்பயிற்சி பட்டறையில் கணினி பயன்பாட்டியல் துறையை சார்ந்த முதுகலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு 211 மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

பயிலரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின் முறையின் உப தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.

கல்லூரியின் இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லூரியின் முதல்வர் முனைவர் சித்ரா மற்றும் துணை முதல்வர்கள் முனைவர் கோமதி. சுசிலா சங்கர், முனைவர் சரண்யா. முனைவர்.உமாகாந்தி, முனைவர்.கிருஷ்ணவேணி மற்றும் விடுதி காப்பாளர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி கணினி பயன்பாட்டியல்துறை துணை பேராசிரியர் முனைவர் வினோத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுவதற்கு ஏஐ டூல்ஸ் என்ற தலைப்பில் திறன் உருவாக்க பயிற்சியை தொடங்கினார். ஏஜ கணினி அறிவியலின் பறந்த கிளையாக காணப்படுகிறது.

வளர்ந்து வரும் இளைய தலைமுறைகளின் அறிவாற்றலும் செயல்திறனும் அதிகரித்து வருவது போலவே, செயற்கை நுண்ணறிவு மேலாதிக்கம் பெற்று வருகின்றது என்பதை கூறினார். இத்துறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வளர்ச்சியடைந்து முழு வெற்றி பெற்று வருகிறது செயற்கை நுண்ணறிவு வாயிலாக கைப்பேசியின் செயலிகளில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் கருவிகளை எவ்வாறு மாணவியர்கள் இயக்க வேண்டும் என்பதை கூறினார். மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஏஐ டூல்ஸ் டிரான்சர்ஃலோ, சைகிட் ஒபன்சிவி, பைடார்ச் எவ்வாறு தரவுதொகுப்பு மூலம் மென்பொருள் வாயிலாக வெளியீடு கொண்டு வருதல், அதை வைத்து ஆராய்ச்சி கட்டுரையில் வெளியிடுதல் பற்றி பயிற்சி அளித்தார். அதற்காக எவ்வாறு திட்டமிடல் மற்றும் தேர்ந்தெடுத்தல் பற்றி விளக்கினார். 

செயற்கை நுண்ணிறிவின் கருவிகள் எவ்வாறு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவுகின்றது என்பதை மென்பொருள் மற்றும் தரவுதொகுப்பு மூலம் நடைமுறை செய்து விளக்கி காட்டினார். இப்பயிற்சியின் மூலம் மாணவியர்கள் தங்கள் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தி கொள்ள முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளை அதிகளவில் பெறமுடியும். இதன் மூலம் மிக குறைந்த நேரத்தில் பெரிய தரவுகளை செயலாக்கி துல்லியமாகவும் திறமையாகவும் செயல்பட உதவிகரமாக இருக்கும்
என்று பேசினார்.
முடிவில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் உமா நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments