Skip to main content

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்



தேனி, செப்.20-
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் தங்கதமிழ்செல்வன் எம்.பி., தலைமையில், மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் 20.9.2024 அன்று நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசினை சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை கண்காணித்து, அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சிகள்இ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, முன்னோடி வங்கி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கனிமவளத்துறை, தொழில் வணிகத்துறை, மாவட்ட வழங்கல் துறை, தொழிலாளர் நல வாரியம், நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ்                    துறைரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அதன் பயன்கள் நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர்  முன்னிலையில் கண்காணிப்பு குழு தலைவரான தேனி பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் துறை சார்ந்த  அலுவலர்களுடன்  ஆலோசிக்கப்பட்டது.

அப்போது துறை சார்ந்த அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி ஆதாரங்கள் ஆகியன தொடர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.

அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அரசு அலுவலர்கள் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரும் போது அதற்கான உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். அதனைப்போன்று ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்மூலம் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்றடையும் வகையில் அலுவலர்கள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என குழு தலைவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  31 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் மூலம் வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தாட்கோ மூலம் 90 சதவீதம் மானியத்துடன் கூடிய வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ப்ரிதா, துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெயபாரதி,  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி, கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் V.R.ராஜன், நகர் மன்ற தலைவர்கள்  ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), ராஜராஜேஸ்வரி சங்கர் (போடிநாயக்கனூர்),  அய்யம்மாள் ராமு (சின்னமனூர்), வனிதா நெப்போலியன் (கம்பம்), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள்  ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments