Skip to main content

நாடார் சரசுவதி கலை கல்லூரியில் காலேஜ் பஜார் விற்பனை கண்காட்சி - 2024

தேனி, செப்.27-

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை; துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் “விற்பனை கண்காட்சி 2024” (காலேஜ் பஜார் 2024) 27.9.2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி செயலாளர் காசி பிரபு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்லூரி இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன் துவக்க உரை ஆற்றினர். கல்லூரி துணை முதல்வர்கள் கோமதி, சரண்யா, உமா காந்தி, கிருஷ்ணவேணி, விடுதி காப்பாளர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த கல்லூரி சந்தையில்  75 கடைகள் இடம் பெற்றன. இந்த கடைகளில் ஆடைகள், கைவினைப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன அடங்கிய கடைகள் அமைந்திருந்தன.

இந்த கல்லூரி சந்தை கண்காட்சியை கல்லூரி மாணவியர்களும், பேராசியர்களும் உற்சாகத்துடன் பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயனடைந்தனர். பிறகு மாணவியர்களிடம் இருந்து பின்னூட்டம் சேகரிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறுகையில், காலேஜ் பஜாரில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் தரமாகவும், நியாயமான விலையிலும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன என்று மாணவியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

முடிவில் கல்லூரி துணை முதல்வர் மற்றும் மேலாண்மைத் துறை தலைவர் சுசீலா சங்கர் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 


Comments