தேனி, செப்.22-
தேனி அருகே உள்ள மதுராபுரி நகரில் தேனி வாசவி கிளப், தேனி வாசவி கிளப் வனிதா, தேனி மாவட்ட நன்செய் அறக்கட்டளை சார்பில் ஆணி பிடுங்கும் திருவிழா 4.0 மற்றும் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இணைந்து ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி வாசவி கிளப் தலைவர் பாலகண்ணன், தேனி வாசவி கிளப் வனிதா தலைவி நாக கௌரி சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி வாசவி கிளப் செயலாளர் மூன் டி.வி., சரவணன், தேனி வாசவி கிளப் வனிதா செயலாளர் ஜீவிதா லோகேஷ், நன்செய் அறக்கட்டளை நிர்வாகி பசுமை செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணிப்பை இயக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் பெரம்பலூர் ரமேஷ் கருப்பையா, வாசவி கிளப் ஜோன் சேர்மன் சுவாதி ஸ்ரீ சரவணகுமார், வாசவி கிளப் முன்னாள் தலைவர்கள் நாகராஜன், சரவணகுமார், ஆசிரியை முத்துக்குமர நாயகி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் போது ஆயிரம் பனை விதைகள் நடு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி வாசவி கிளப் பொருளாளர் இந்திரஜித் செய்திருந்தார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments