கோவை, செப்.23-
கோவை, பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடை கிராமத்தில், மக்கள் பாதுகாப்பு உரிமைகள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் அமிர்தா பாலசுப்ரமணியம் தலைமையில் சமூக நலன் சார்ந்த தேவைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இயக்கத்தின் தலைவர் ருக்மணி தேவி, செயலாளர் வக்கீல் முத்துக்குமார், பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு தலைவர் உடுமலை சிவக்குமார், முதன்மை செயலாளர் நைனா முகமது, வழக்கறிஞர் ரவி, மகளிர் அணி மாநில தலைவர் பிரேமா, கோவை குமார், சேது என்று முத்துராமன், செல்வராஜ் ,நித்யா,
சரண்யா மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அவசர தேவையான ஆம்புலன்ஸ், ஃப்ரீசர் பாக்ஸ் இலவசமாக ஏற்பாடு செய்திடவும், அதே போன்று விரைவில் கிராம மக்களின் குழந்தைகளிடம் விளையாட்டு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கலாம், சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பாட வகுப்புகள் நடத்துவது என்றும், ஒவ்வொரு மாதம் ஒரு முறை கிராமங்களுக்கு சென்று தேவையான உதவிகள் செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது,
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments