ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மண் விலை திடீர் ஏற்றம்: தேனியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி, செப்.26-
தேனி மாவட்டத்தில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மண், பி.சாண்ட் மண் விலையை திடீரென உயர்த்தி உள்ளதாக கூறி டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் கடந்த 19-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 23-ம் தேதி தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் பிறகு கிரஷர் உரிமையாளர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விலை குறைப்பிற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ள இந்த திடீர் விலை ஏற்றத்தால் எவ்வாறெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராஜா, மகேந்திரன், வேல்மணி, காஜா மமைதீன், மதுசூதனன், மணி, சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்டத்தில் உள்ள கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ள ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மண், பி.சாண்ட் மண் விலையை குறைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
சசி துரை, சிறப்பு நிருபர்
Comments