தேனி, செப்.20-
தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 19.9.2024 மற்றும் 20.9.2024 ஆகிய 2 தினங்கள் (36 மணி நேரம்) நடைபெற்றது.
இந்த போட்டிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டிக்கு அமெரிக்கா டெஸ்லா சைபர் செக்யூரிட்டி. தலைமை நிர்வாக அதிகாரி வரதராஜ் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பொறியியல் துறைகளில் எதிர்கொள்ளும் தேவைகளுக்கான தீர்வினை (Problem Solving) அளிக்கும் கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேசன் செக்யூரிட்டி, இன்ப்ராஸ்ட்ராக்சர்ஸ் செக்யூரிட்டி ஆகிய துறைகளின் வளர்ச்சி அதன் மூலம் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
பொறியியல் துறையில் தனித்திறன் மற்றும் தொடர்ந்து பயிற்சி அனுபவத்தை வளர்த்து கொள்ளுவதன் மூலம் அறிவியல் உலகத்திற்கு தீர்வு காணும் வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அமைய வேண்டுமென்று சிறப்புரையாற்றினார்.
போட்டியின் போது தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை தொடங்கி வைத்தனர்.
பெங்களுர் மற்றும் தேனி டபிள்யூடெக் சொலியுசன் ப்ரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கண்ணன் ஸ்ரீனிவாசன், பொள்ளாச்சி டாக்டர்.M.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் பேராசிரியர் சுதா, சென்னை சவீதா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் பேராசிரியர் வனிதா, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் பேராசிரியர் கீர்த்திகா, ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
பெங்களூர் AMC பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கணினிபொறி அறிவியல் துறையின் துறைத்தலைவர் மாரீஸ்வரி, காட்டான் குளத்தூர் SRM பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெகாரானிட்க்ஸ் துறையின் பேராசிரியர் கிராஸ் ஆஷா வைஸ், தேனி டி.எம்., இனோவேசன் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த்ராஜ், பெங்களுர் CTO எட்டான் வீசினரிஸ் இயக்குநர் மது மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியில் சாப்ட்வேர் பிரிவு படைப்பில் 56 அணிகள், ஹார்டுவோர் பிரிவு படைப்புகளில் 52 அணிகள் என மொத்தம் 108 அணிகள் பங்கு பெற்று தங்களுடைய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். 2 அணிகளிலும் முதல் பரிசாக ரூ.15,000/- வழங்கப்பட்டது.
சிறந்த 5 படைப்புகளுக்கு தலா ரூ.6,000/- வழங்கப்பட்டது. மேலும், விசினரி ஷோசியல் இன்னவேட்டா விருது, பிட்ச் மாஸ்டரி விருது, ஆர்ட் ஆப் பிரசன்டேசன் விருது, ஹார்டுவேர் விருட்சோ விருது, சாப்ட்வேர் சினர்ஜி விருது, சொசைட்டியல் கேம் ஜேன்சர் விருது, இன்பேக்ட்டில் இன்னவேட்டர் விருதுகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தனர்.
ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியின் அறிக்கையினை எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் துறைத்தலைவர் ஆதிலிங்கம் சமர்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையின் தலைவர் விக்னேஷ் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments