தேனி, செப்.30-
தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கத்தின் சார்பில் மக்கள் மன்றம் தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் கலெக்டர் அலுவலகம் எதிரே கட்டப்பட்டுள்ளது. இந்த விஸ்வகர்ம மக்கள் மன்றம் திறப்பு விழா, விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா 29.9.2024 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஜெயச்சந்திர ஸ்தபதியார், தொழிலதிபர்
மகேந்திரன், விஸ்வகுல மத்திய சங்க தலைவர் சொக்கர்ராஜ், ஓய்வு பெற்ற கமிஷனர் ராஜேந்திரன், போடியை சேர்ந்த சங்க தலைவர்கள் சேகர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் மன்றத்தை தொழிலதிபர் ரத்தினம் திறந்து வைத்தார். மக்கள் மன்றத்தின் உணவு கூடத்தை தொழிலதிபர் சந்திரன் திறந்து வைத்தார். விஸ்வகர்ம கொடியை சங்கத்தின் செயல் தலைவர் விஸ்வா பில்டர்ஸ் பாலமுருகன் ஏற்றி வைத்தார்.
விழாவின் போது விஸ்வகர்ம சமுதாய பெண்கள் ராஜேஸ்வரி, தனலட்சுமி, ஆவுடைத்தங்கம், வேலுமணி
தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.
விழாவில் ஶ்ரீலஶ்ரீ சிவசண்முகசுந்தரபாபுஜி
சுவாமி, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து விஸ்வகர்ம சமுதாயத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
விழாவில் தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு கவுன்சிலர் கடவுள், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம் உள்பட விஸ்வகர்ம மகாஜன சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2000-க்கும் மேற்பட்ட விஸ்வகர்ம சமுதாய பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
முடிவில் ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பி.சி.பட்டி திருமுலுச்சாமி நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments