Skip to main content

Posts

Showing posts from October, 2023

பெரியகுளம் அருகே அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  52-வது  ஆண்டு  தொடக்க விழாவை முன்னிட்டு பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் எம்.ஜி.ஆர்  திடலில் 28.10.2023 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி நகர் கழக செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் எஸ்.வி.சேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ராஜகுரு, முன்னாள் ஒன்றிய தலைவர் வைகை பாண்டி, பெரியகுளம் நகர் கழக பொறுப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வி.அன்னபிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் தேனி  கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர்,  தேனி    மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன்,  கழக கொள்கை பரப்பு செயலாளர் கோபி காளிதாஸ், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மேல்மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.பாண்டியன் நன்றி கூறினார். சீனிவாசன், உதவி ஆசிரியர் 

வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் குளறுபடிகளை களைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலருக்கு பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் ஓ.சண்முகசுந்தரம் கோரிக்கை

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், பெரியகுளம் நகராட்சி அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் குழு தலைவருமான ஓ.சண்முகசுந்தரம், தேனி மாவட்ட நிர்வாகம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்கள் நீக்கம் செய்யப்படவில்லை என்றும், இருமுறை பதிவு மற்றும் பல ஆண்டுகளாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் புலம் பெயர்ந்துள்ள வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்ததோடு, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதிகளில் தீவிர களப்பணி மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெரியகுளம் நகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறையான சரிபார்ப்பு பணிகள் மேற்கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்றவற்றை சரிபார்ப்பு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.  அதுபோல இறப்பு மற்றும் புலம் பெயர்ந்த வாக்காளர்களை நீக்...

மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியிலிருந்து அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது படகில், கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்க சென்றார்கள். அவர்கள் மீன்பிடித்து விட்டு மாலத்தீவு கடல் பகுதி வழியாகக் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதி வழியாக வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி, மீனவர்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 27.10.2023 அன்று கனிமொழி எம்.பி., தனது சமூக வளைதள பக்கத்தில் “எனது தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது மாலத்தீவு கடலோர காவல்படையினாரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து தலையிட்டு நமது மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்...

ஏலக்காய் மின் உலர்த்தி கண்டுபிடிப்பு: கே.கே.பட்டி விஞ்ஞானி உதயகுமாருக்கு அமைச்சர்கள் நிதி வழங்கி பாராட்டினர்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த விஞ்ஞானி உதயகுமார் (வயது 50). இவர் நீண்ட நாள் உழைப்பில் ஏலக்காய் மின் உலர்த்தி (எலக்ட்ரிக் டிரையர்) கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில் இவரை பாராட்டி இந்திய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை தொழில் முனைவு மற்றும் புத்தாக்க மைய இயக்குனர் சஞ்சீவனா ரூ.15 லட்சத்தை அவருக்கு ஊக்கத்தொகையாக அறிவித்தார்.  அந்த ஊக்க தொகையினை தமிழக அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் விஞ்ஞானி உதயகுமாருக்கு வழங்கினார்கள். விஞ்ஞானி உதயகுமார் கண்டுபிடிப்பான எலக்ட்ரிக் டிரையர் சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த 6 ஆயிரத்து 600 கண்டுபிடிப்புகளில் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு இந்திய ஏலக்காய் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். சசிதுரை, சிறப்பு நிருபர் 

தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், உடற் பயிற்சி கூடம் : கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 28.10.2023 அன்று மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன், அசோக் நகர், லையன்ஸ் டவுண் புல்தோட்டம் மற்றும் நந்தகோபாலபுரம் ஆகிய 4 இடங்களில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த இறகு பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார். இதன...

தூத்துக்குடி தொகுதியில் பழுதடைந்த 20 காலனி வீடுகள் புதிய கான்கிரீட் வீடுகளாக மாற்றம்: கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்.

தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தத்தெடுத்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்.பி.,-யின் முயற்சியால், NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited, Chennai. (என்டிடி குளோபல் டேட்டா மையங்கள் & கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை) தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புது வீடுகள் கட்டும் கட்டுமான பணிகளை ஏற்பாடு செய்தார்.  கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவு பெற்ற 9 வீடுகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. 24.10.2023 அன்று திறந்து வைத்தார்.  இதனை அடுத்து நடைபெற்ற நிகழ்வில் கனிமொழி கர...

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெலுங்கான மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் குடிமை பொருட்கள் வரவழைப்பு: பொருட்களை கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டத்தில் அகல ரயில் பாதை அமைத்த பிறகு முதன் முறையாக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெலுங்கான  மாநிலத்திலிருந்து குடிமை பொருட்கள் ரயிலில் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 22.10.2023 அன்று தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு ரேசன் பொருட்கள் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது.  தேனி மாவட்டத்தில் அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 8,000 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலம் வாராங்கால் மாவட்டம் சுங்கன்பாத் இரயில் நிலையத்திலிருந்து 21 பெட்டிகளில் 1,326 டன் அரிசி 26,436 மூட்டைகள் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு தேனி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.  12 ஆண்டுகளுக்கு பின்பு ரயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிமை பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்...

தேனியில் இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்வு: ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றத்தை பாராட்டி தீர்மானம்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி 15.10.23 அன்று மாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி நகர அமைப்பாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். தேனி நகர செயலாளர் பிரேம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ் வழிநடத்தினார். நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்: 1  தேனி அருகே வீரபாண்டி திருமலை மஹாலில் நடைபெற்ற இந்து எழுச்சி முன்னணி பேரியக்கத்தின் 8-ஆம் ஆண்டு மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றிகளையும் மற்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இந்து எழுச்சி முன்னணி பேரியக்கம் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் : 2. தேனி வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு மீட்பு பணியை எந்தவித பாரபட்சமும் காட்டாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மா...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் 8-ம் ஆண்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி ஸ்ரீ திருமலை மஹாலில் 15.10.2023 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் க.இராமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறுவன தலைவர் பொன்.இரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, சோலைராஜன்,தேனி நகர தலைவர் செல்வபாண்டியன், நகர பொருளாளர் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர்: அரண்மனை முத்துராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-  இரங்கல் தீர்மானம்: பாரத தேசத்தின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி MS. சுவாமிநாதன் அவர்கள் மறைவுக்கு இந்து எழுச்சி முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து கொள்கிறது. தீர்மானம்: (1). "பூரண மதுவிலக்கு"  தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் தெருக்கள், மூலை முடுக்குகள் எல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தமிழக மக்களின் குறிப...

மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: கலெக்டர் ஷஜீவனா திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட மஞ்சளாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாய நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன்  ஆகியோர் முன்னிலையில் 15.10.2023 அன்று திறந்து வைத்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து, தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் என மொத்தம் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 3,386 ஏக்கர் நிலங்களுக்கு அக்டோபர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வினாடிக்கு 60 கனஅடி வீதமும், டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 31-ம்தேதி வரை 50 கனஅடி வீதமும், பிப்ரவரி 1- ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை 45 கனஅடி வீதம்,      தண்ணீர் திறந்து விடப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 1,873 ஏக்கர் நிலங்களுக்கு ...

சென்னையில் தி.மு.க மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர், அகில இந்திய பெண் தலைவர்கள் பங்கேற்பு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் 'மகளிர் உரிமை மாநாடு' சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தி.மு.க தலைவரும்,தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னிலை வகித்தார். தி.மு.க மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் அகில இந்திய பெண் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி கருணாநிதியும் மேடையில் நினைவு பரிசு வழங்கினார்கள்.  இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், அமைச்சருமான லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந...

ஆண்டிபட்டியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை

தேனி மாவட்ட. கலெக்டர் ஷஜீவனா அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் ஆலோசனையின் பேரில்  ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) சூரியகுமார் ஆகியோர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வணிக மற்றும் உணவகங்களில் காலாவதியான உணவு பொருட்கள், செயற்கை வண்ண பொடிகள் சேர்க்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் பிளாஸ்டிக் கவர்கள் 16 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் அழிக்கப்பட்டது. அதுபோல கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.1000 வீதம் 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டி கவர்கள் பயன்படுத்திய வகையில் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.500 வீதம் 6 கடைகளுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது . சசி...

தேனி, ஆண்டிபட்டி அரசு ஐ.டி.ஐ., மற்றும் கம்மவார் சங்க ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம், தேனியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து பயிற்சி பெற்றவர்களுக்கான 6-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 12.10.2023 அன்று மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (Computer Operator and Programming Assistant) பிரிவில் 32 மாணவ, மாணவிகளுக்கும், கட்டிட பட வரைவாளர் (Draughtsman-Civil) பிரிவில் 18 மாணவ, மாணவிகளுக்கும், டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (Deshktop Publishing Operator) பிரிவில் 21 மாணவ, மாணவிகளுக்கும், மின்சார பணியாள் பிரிவில் (Electrician) 27 மாணவ, மாணவிகளுக்கும்,  பொருத்துநர் (Fitter) பிரிவில் 19 மாணவர்களுக்கும், இயந்திர வேலையாள் (Machinist) பிரிவில் 9 மாணவர்களுக்கும், இயந்திர வேலையாள் அரவை (Machinist Grinder) பிரிவில்   8 மாணவர்களுக்கும், பம்ப் ஆப்ரேட்டர் (Pump Operator) பிரிவில் 19  மாணவர்களுக்கும், மெக்கானிக்கல் டிராக்டர் (Mechnical Tractor) பிரிவில் 28 மாணவர்களுக்கும், கடைசலர் (Turner) பிரிவில் 17 மாணவர்களுக்கும், பற்ற வைப்பாளர் (...

தேனி மாவட்டத்தில் போலீசாரல் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் அக் 20-ந் தேதி பொது ஏலத்தில் விற்பனை: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு கு.வி.மு.ச 102 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலமிட்டு விற்பனை செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில் வைத்து 20.10.2023 அன்று காலை 11 மணியளவில் அல்லது மாவட்ட கலெக்டரால் ஒத்தி வைக்கக்கூடிய மற்றொரு நாளில் பகிரங்கமாக ஏலத்தில் விற்பனை செய்யப்படும். மேற்படி வாகனங்களின் பட்டியலை https/theni.nic.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஏல நிபந்தனைகள்: 1. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.1000 முன்பணம் ஏல தேதிக்கு முன் செலுத்தி ரசீது பெற்றிருக்க வேண்டும். 2. அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். 3. அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் ஏலம் முடிவடைந்தவுடன் ஏலத்தொகையுடன் 18% GST வரி சேர்த்து செலுத்த வேண்டும்.  4. வாகன ஏலம் மற்றும் உறுதி...

தேனியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றான தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 11.10.2023 அன்று நடைபெற்றது.  இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது. அப்போது ஆக்கிரமிப்பாளர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தங்களது கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர செட், பெட்டிகள், போர்டுகள் போன்றவற்றை அகற்றி கொண்டனர். இருப்பினும் கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.  மேலும் சாலையின் அளவுகள் எவ்வளவு என்று வரைபடத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு சாலையின் அளவு குறைவாக இருக்கும் கட்டிடங்கள் முன்பு எத்தனை மீட்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று அளவீடு செய்யப்பட்டு பெயிண்ட் மூலம் குறிக்கப்பட்டு  சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களிடம்...