Skip to main content

ஏலக்காய் மின் உலர்த்தி கண்டுபிடிப்பு: கே.கே.பட்டி விஞ்ஞானி உதயகுமாருக்கு அமைச்சர்கள் நிதி வழங்கி பாராட்டினர்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த விஞ்ஞானி உதயகுமார் (வயது 50). இவர் நீண்ட நாள் உழைப்பில் ஏலக்காய் மின் உலர்த்தி (எலக்ட்ரிக் டிரையர்) கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில் இவரை பாராட்டி இந்திய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை தொழில் முனைவு மற்றும் புத்தாக்க மைய இயக்குனர் சஞ்சீவனா ரூ.15 லட்சத்தை அவருக்கு ஊக்கத்தொகையாக அறிவித்தார். 

அந்த ஊக்க தொகையினை தமிழக அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் விஞ்ஞானி உதயகுமாருக்கு வழங்கினார்கள். விஞ்ஞானி உதயகுமார் கண்டுபிடிப்பான எலக்ட்ரிக் டிரையர் சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த 6 ஆயிரத்து 600 கண்டுபிடிப்புகளில் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு இந்திய ஏலக்காய் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

சசிதுரை, சிறப்பு நிருபர் 

Comments