Skip to main content

வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் குளறுபடிகளை களைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலருக்கு பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் ஓ.சண்முகசுந்தரம் கோரிக்கை

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், பெரியகுளம் நகராட்சி அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் குழு தலைவருமான ஓ.சண்முகசுந்தரம், தேனி மாவட்ட நிர்வாகம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்கள் நீக்கம் செய்யப்படவில்லை என்றும், இருமுறை பதிவு மற்றும் பல ஆண்டுகளாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் புலம் பெயர்ந்துள்ள வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்ததோடு, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதிகளில் தீவிர களப்பணி மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெரியகுளம் நகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறையான சரிபார்ப்பு பணிகள் மேற்கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்றவற்றை சரிபார்ப்பு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும். 

அதுபோல இறப்பு மற்றும் புலம் பெயர்ந்த வாக்காளர்களை நீக்கம் செய்து  இறுதி வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு திருத்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத வகையில் சரிபார்ப்பு பணிகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு, பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments