Skip to main content

பெரியகுளம் அருகே அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  52-வது  ஆண்டு  தொடக்க விழாவை முன்னிட்டு பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் எம்.ஜி.ஆர்  திடலில் 28.10.2023 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி நகர் கழக செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் எஸ்.வி.சேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ராஜகுரு, முன்னாள் ஒன்றிய தலைவர் வைகை பாண்டி, பெரியகுளம் நகர் கழக பொறுப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வி.அன்னபிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார்.


பொதுக்கூட்டத்தில் தேனி  கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர்,  தேனி    மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன்,  கழக கொள்கை பரப்பு செயலாளர் கோபி காளிதாஸ், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மேல்மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.பாண்டியன் நன்றி கூறினார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments