Skip to main content

தேனி மாவட்டத்தில் போலீசாரல் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் அக் 20-ந் தேதி பொது ஏலத்தில் விற்பனை: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு கு.வி.மு.ச 102 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலமிட்டு விற்பனை செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில் வைத்து 20.10.2023 அன்று காலை 11 மணியளவில் அல்லது மாவட்ட கலெக்டரால் ஒத்தி வைக்கக்கூடிய மற்றொரு நாளில் பகிரங்கமாக ஏலத்தில் விற்பனை செய்யப்படும். மேற்படி வாகனங்களின் பட்டியலை https/theni.nic.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஏல நிபந்தனைகள்:

1. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.1000 முன்பணம் ஏல தேதிக்கு முன் செலுத்தி ரசீது பெற்றிருக்க வேண்டும்.

2. அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்.

3. அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் ஏலம் முடிவடைந்தவுடன் ஏலத்தொகையுடன் 18% GST வரி சேர்த்து செலுத்த வேண்டும். 

4. வாகன ஏலம் மற்றும் உறுதிப்படுத்தும் குழுவினரால் (Auctioning and confirmation committee) ஏலம் உறுதி செய்யப்பட்ட பின்னரே ஏல பொருட்கள் ஏலதாரரிடம் ஒப்படைக்கப்படும்.

5. ஏலத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ஏல தேதியினை தள்ளி வைக்கவோ வாகன ஏலம் மற்றும் உறுதிப்படுத்தும் (Auctioning and confirmation committee) குழுவிற்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments