தேனி மாவட்டம், தேனியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து பயிற்சி பெற்றவர்களுக்கான 6-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 12.10.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (Computer Operator and Programming Assistant) பிரிவில் 32 மாணவ, மாணவிகளுக்கும், கட்டிட பட வரைவாளர் (Draughtsman-Civil) பிரிவில் 18 மாணவ, மாணவிகளுக்கும், டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (Deshktop Publishing Operator) பிரிவில் 21 மாணவ, மாணவிகளுக்கும், மின்சார பணியாள் பிரிவில் (Electrician) 27 மாணவ, மாணவிகளுக்கும், பொருத்துநர் (Fitter) பிரிவில் 19 மாணவர்களுக்கும், இயந்திர வேலையாள் (Machinist) பிரிவில் 9 மாணவர்களுக்கும், இயந்திர வேலையாள் அரவை (Machinist Grinder) பிரிவில் 8 மாணவர்களுக்கும், பம்ப் ஆப்ரேட்டர் (Pump Operator) பிரிவில் 19 மாணவர்களுக்கும், மெக்கானிக்கல் டிராக்டர் (Mechnical Tractor) பிரிவில் 28 மாணவர்களுக்கும், கடைசலர் (Turner) பிரிவில் 17 மாணவர்களுக்கும், பற்ற வைப்பாளர் (Welderl) பிரிவில் 35 மாணவர்களுக்கும் என மொத்தம் 272 மாணவர்களுக்கு தொழிற் படிப்பு பயின்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். அப்போது அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, ஐ.டி.ஐ நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று ஆண்டிபட்டி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதல்வர் ஜெ.சரவணன் முன்னிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுஜாதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயண மூர்த்தி, மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் கணேஷ்குமார், பி.வஜ்ரவேல், சி.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதுபோல தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் செயல்பட்டு வரும் தேனி கம்மவார் சங்கம் தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ செயலாளர் பெருமாள் சாமி தலைமை தாங்கினார். ஐ.டி.ஐ முதல்வர் பிரகாசம் வரவேற்றார். தேனி கம்மவார் சங்க செயலாளர் மகேஷ், பொருளாளர் ரெங்கராஜ், ஐ.டி.ஐ இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.டி.ஐ பொருளாளர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள் சாமி மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். இந்த விழாவில் தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் பொருளாளர் தாமரைக்கண்ணன், பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் உள்பட ஐ.டி.ஐ ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவை ஏ.டி.ஓ அவினாஷ் தொகுத்து வழங்கினார். முடிவில் டி.ஓ சேகர் நன்றி கூறினார்.
சதிஷ், இணை ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments