தேனியில் இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்வு: ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றத்தை பாராட்டி தீர்மானம்
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி 15.10.23 அன்று மாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி நகர அமைப்பாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். தேனி நகர செயலாளர் பிரேம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ் வழிநடத்தினார். நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்: 1 தேனி அருகே வீரபாண்டி திருமலை மஹாலில் நடைபெற்ற இந்து எழுச்சி முன்னணி பேரியக்கத்தின் 8-ஆம் ஆண்டு மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றிகளையும் மற்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இந்து எழுச்சி முன்னணி பேரியக்கம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 2. தேனி வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு மீட்பு பணியை எந்தவித பாரபட்சமும் காட்டாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாவட்ட நிர்வாகத்தையும், பொதுப்பணித்துறையையும், தேனி -அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தையும் இந்து எழுச்சி முன்னணி மனதார பாராட்டுகிறது.
சசிதுரை, சிறப்பு நிருபர்
Comments