Skip to main content

Posts

Showing posts from September, 2023

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் படகு சவாரி விடும் திட்டத்தை கைவிட வேண்டும்: தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரி உள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் மதிகெட்டான் சோலை, அலங்காரம், சொக்கன்அலை, கண்ணக்கரை வழியாக 28 கிலோ மீட்டர் வனப்பகுதியில் பயணித்து சோத்துப்பாறை அணையை அடைகிறது. அங்கிருந்து பெரியகுளம் மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுமார் 2 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.  பெரியகுளம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சுற்றுலா என்ற போர்வையில் பேரிஜம் அணையில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் படகு சவாரி விடப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. காற்று மாசு, தண்ணீர் மாசு ஆகியவற்றை தடுத்து பாதுகாக்க வேண்டிய வனத்துறையே இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது  கண்டனத்துக்குரியது. பேரிஜம் ஏரியில் படகு சவாரி தொடர்ந்து நடைபெற்றால் சுற்றுலா பயணிகளால் அங்கு வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழி...

தேனியில் 156 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம்

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம் 29.9.23 அன்று மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாதந்தோறும் கடனுதவிகளை வழங்கிடவும், சுய உதவி குழுக்களை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்காக சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்கள்.  அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) கூட்டுறவுத்துறை, மத்திய கூட்டுறவு வங்கி, முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் இணைந்து மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி  வழங்கும் மாதாந்திர முகாம் 29.9.23 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, பெண்களின் கூட்டு முயற்சியில் இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்களின் குடும்ப வருமானத்தையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும், வ...

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் வேவ்ஸ்-23 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ்-23 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கி கலை மற்றும் பண்பாட்டு விழாவினை துவக்கி வைத்தார். உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் C.மதளைசுந்தரம் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழாவில் நாட்டுப்புற நடனம், பாட்டு போட்டி, கவிதை போட்டி, நடனப்போட்டி குறும்படம், தெருக்கூத்து, மல்டிமீடியா, தற்காப்பு கலைகள், பேஸ் பெயின்டிங், ஸ்னோபகிராபி, மெகந்தி போட்டி, பொக்கை மேக்கிங், ஆர்ட் புறம் வேஸ்ட், ஸ்பெல் பீ, புதையல் வேட்டை, சிகை அலங்காரம், வெஜிடபிள் அல்லது புரூட் கார்விங், கார்பன் ஆர்ட், குசைன் மாஸ்டர். கிளாஸ் பெயின்டிங், கொலோஜ். ஆன் ஸ்டேஜ் ஓடிசி, இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் பிரிவல்ஸ், டாக் ஆன் எஸ்பாட...

அக்.2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: தேனி கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவரால் நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள். காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம். 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது. மேலும் 130 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபை கூட்டத்தை மிக சிறப்பாக நடத்திட, உரிய நடவடிக்கைகள் மேற்கொ...

தேனி நகரில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்தி கொள்ள 29.2.2024 வரை காலக்கெடு நீட்டிப்பு: நகராட்சி ஆணையாளர் தகவல்

தேனி - அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன் முறைபடுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு, உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை எண்.118 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நாள்.4.9.2023-ன்படி ஆணையிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutregin என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து மனையினை வரன்முறை படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி கட்டிட விதிகள் 2019 பாகம் 11 விதி 6- ன்படி நகர் பகுதியில் கட்டட விண்ணப்பங்களை Onlineppa.tn.gov.in. இணையதளம் வாயிலாக உரிய கட்டட அனுமதி பெற்ற பின்பே கட்டிடங்கள் வரைபடத்தின்படி கட்ட வேண்டும். அனுமதியின்றி மற்றும் அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு திருத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப...

மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுக்க அனுமதி: கனிமொழி கருணாநிதி எம்.பி.-க்கு விவசாயிகள் நன்றி

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குருகாட்டூர் ஊராட்சியில், தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் 13.9.2023 அன்று 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகள் கனிமொழி எம்.பி.-யிடம், கடம்பாகுளம் தூர்வாருவதற்கும், கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.  அதனைத்தொடர்ந்து, கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு டிராக்டர் மூலம் விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு அந்த பணிகளை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் 27.9.2023 அன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே 'மக்கள் களம்' மக்கள்...

சுருளி அருவியில் சாரல் விழா: அக். 2-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தென்றல் தவழும் சுருளிதீர்த்தம் பகுதியில் சாரல் திருவிழா மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா  தலைமையில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன்  முன்னிலையில் 27.9.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழா 27.9.2023 முதல் 2.10.2023 வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,நமது மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை பொதுமக்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இயற்கையோடு ஒன்றி இருப்பதற்காக சுருளி சாரல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா தளங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  செய்தி மக்கள் தொடர்புத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துற...

தேனி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு திறப்பு

தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுள்ள போக்சோ  வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை  மாவட்ட அமர்வு நீதிபதி  கே.அறிவொளி அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே, ஆகியோர் முன்னிலையில் 27.9.2023 அன்று திறந்து வைத்தார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012  (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்க குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்க லாம் என சட்டம் குறிப்பிடுக...

தேனி அருகே நோபல் உலக சாதனை சிலம்ப போட்டி: 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தேனி தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை, தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலைக்கழகம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் சார்பில்  நோபல் உலக சாதனை சிலம்பம் போட்டி தேனி தாலுகா பகுதியில் உள்ள ஸ்ரீரெங்காபுரத்தில் 24.9.2023 அன்று நடைபெற்றது. போட்டிக்கு வைகை அரிமா தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ரவி, மண்டல தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா இளங்கோ தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் சிலம்பத்தில் நமது பாரம்பரிய உடை உடுத்தி 3 மற்றும் 4 வீடு பாட முறையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியினை தொடர்ந்து 5 அடி உயர நாற்காலியில் வேல்கம்பு சுற்று முறை 3 மணிநேரமும், கண்களை கட்டிக்கொண்டு 3 மணிநேரம், தீப்பந்த சிலம்பமும்  சுற்றி தனித்திறன் நோபல் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  போட்டியில் சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், கோயம்புத்தூர் உள்பட 7 மாவட்டங்களில் இருந்து 250 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 3 மாணவர்கள் தனித்திறன் நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டிகள்...

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலைகளை ஒழுங்குபடுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொது இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உருவாகும் குப்பைகளை கொட்டுதல், சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூராக அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துதல், பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துதல் போன்றவை குறித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் 26.9.2023 அன்று தேனி அம்பி வெங்கடசாமி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி டி.எஸ்.பி., பார்த்தீபன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  தேனி தாசில்தார் சரவணபாபு, நெடுஞ்சாலைத்துறை தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர்  சங்க பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் உள்பட வர்த்தக சங்கம், ஓட்டல் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்,...

தேனியில் உடல் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளர் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளாராக பணிபுரிந்து வந்த வடிவேல் அவர்கள் கடந்த 23.9.2023 அன்று பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சீலையம்பட்டி, சப்பாணி அம்மன் கோயில் என்ற இடத்தில் டூவிலரில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 24.9.2023 அன்று சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தால்  அறிவிக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த வடிவேல் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அன்னாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தார்கள். அதன்படி 26.9.23 அன்று அன்னாரின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், கண்கருவிழி, தோல் ஆகியவை மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ராஜாஜி மருத்துவனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தவர்களுக்கு  தானமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மர...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்த தேனி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

“மங்கயராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா“ என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. அவர் இன்று இருந்திருந்தால் “மங்கையராய் தமிழ்நாட்டில் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றே சொல்லியிருப்பார். அந்த அளவிற்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த உலகில்  தாய், மனைவி, சகோதரி, தோழி, மகள் என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான். ஒருவர் பிறந்த நாடு கூட, தாய் நாடு என்றுஷதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயரில் தான் விளங்குகிறது. பெண்களும் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறார்.சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட, குடும...

தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் அறிவியல் தினவிழா எக்ஸ்போ: 154 படைப்புகள் இடம் பெற்றன

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் புராடக்ட் எக்ஸ்போ மற்றும் அறிவியல் தின விழா 23.9.23 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி அவர்கள் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் டாக்டர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் C.மதளைசுந்தரம் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானி டாக்டர்.R.S.கண்ணு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் மாணவர்கள் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய வேண்டுமென்றும், இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை இருப்பினும் குறைந்த அளவு இளம் விஞ்ஞானிகளே உள்ளனர். எனவே ஆராய்ச்சி மற்றும் மேம்ப்பாட்டு துறையை மேம்படுத்த வேண்டுமென்றும், சந்திராயன் -3 வெற்றி பெற்றதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமே சாத...

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., முன்னெடுப்பில் 59 ஊராட்சிகளில் 'மக்கள் களம்' குறை கேட்டல் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் 59 ஊராட்சிகளில் 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை கனிமொழி எம்.பி.- யிடம் வழங்கி உள்ளனர். இந்த மக்கள் களம் நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, பெண்களுக்கு தையல் இயந்திரம், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றி வருகிறார்.  இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு எம்.பி., உத்தரவிட்டு வருகிறார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர், மின்சார வாரியத்துறையினர் என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.  நிகழ்ச்சியின் போது மனுக்களை பெற்று சிறிது நேரம் மக்களுட...

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா  மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 23.9.2023 அன்று நடைபெற்றது.உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணம் இல்லாமல் ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 23.7.2009 ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றிணைந்து 2018-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர்.  ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் வரை  கட்டணமில்லாமல் தரமான சிகிச்சைகள் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த...

சங்கமம் அறக்கட்டளை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

கூடலூர் நகராட்சி 15-வது வார்டு மற்றும் கூடலூர் நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு, வ.உ சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சித்த மருத்துவ முகாம் சங்கமம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. முகாமிற்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கம்பம் வட்டார அரசு சித்த மருத்துவர்  சிராஜுதீன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி பரிசோதனை மேற்கொண்டார்.  முகாமில் சுருளிப்பட்டி அன்பு ராஜா, 15-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் தேவதர்ஷினி விக்னேஸ்வரன் மற்றும் அருந்ததியர் சமுதாய தலைவர், செயலாளர், பொருளாளர், இதர பொறுப்பாளர்கள் அனைத்து கட்சி நண்பர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் வசந்த், சரண்யா, பிரியங்கா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பாண்டியன், உதவி ஆசிரியர் 

கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் மலை மாடுகள் கண்காட்சி

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 22.9.2023 அன்று துவக்கி  வைத்து பார்வையிட்டார். தேனி, சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டின மலைமாடுகளை பாதுகாப்பதற்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட இனமாக மலைமாடுகளை அங்கிகரிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலை மாடுகளை அறிவியல் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் இனவிருத்தி முறைகளை  கால்நடை வளர்ப்பவர்களிடம் கற்பிக்கவும் மற்றும் மக்களிடையே மலை மாடுகளின் மகத்துவம் குறித்த விளக்கம் அளித்தல், அழிந்து வரும் மலைமாடுகளை பாதுகாப்பதற்காகவும்,  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று ...