தேனி நகரில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்தி கொள்ள 29.2.2024 வரை காலக்கெடு நீட்டிப்பு: நகராட்சி ஆணையாளர் தகவல்
தேனி - அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன் முறைபடுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு, உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை எண்.118 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நாள்.4.9.2023-ன்படி ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutregin என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து மனையினை வரன்முறை படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி கட்டிட விதிகள் 2019 பாகம் 11 விதி 6- ன்படி நகர் பகுதியில் கட்டட விண்ணப்பங்களை Onlineppa.tn.gov.in. இணையதளம் வாயிலாக உரிய கட்டட அனுமதி பெற்ற பின்பே கட்டிடங்கள் வரைபடத்தின்படி கட்ட வேண்டும். அனுமதியின்றி மற்றும் அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு திருத்தப்பட்ட தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 (Amended by Act 35 of 2022 ) பிரிவு 133 (5), 135(1) (2), 135 (6) ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் பிரிவு 180 -ன் கீழ் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்படும். கட்டுமானம் தொடர்ந்து கட்டுவதற்கான அனுமதிச்சான்று (Construction Continuance Certificate மற்றும் கட்டட முடிவு சான்று ( Completion certificate) தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019 -ன்விதி எண்.20-ன் படி 3 குடியிருப்புகளுக்கு உட்பட்ட (அல்லது) 750 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான மற்றும் 12 மீட்டர் உயரத்திற்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்கள் தவிர்த்து ஏனைய அனைத்து வகையிலான கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதற்கு கட்டிடத்தின் உரிமையாளர் / கட்டுமான நிறுவனத்தினர் /பொது அதிகார முகவர் ஆகியோர் TNCDBR -2019-ன் அட்டவணை XIV -ல் குறிப்பிட்டுள்ளபடி படிவங்கள் 5, 6 ,7, 8-ல் விண்ணப்பம் இணைய வழி சமர்ப்பித்து, மின் இணைப்பு பெற கட்டட முடிவு சான்று பெற்றுக்கொள்ளலாம். கட்டிட பணி முடிந்தவுடன் அக்கட்டடத்திற்கு இணையதளத்தின் வழியாகவே வரிவிதிப்பு செய்ய விண்ணப்பிக்கலாம். எனவே மேற்படி அனைத்தும் Online மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது என்று தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments