Skip to main content

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலைகளை ஒழுங்குபடுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொது இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உருவாகும் குப்பைகளை கொட்டுதல், சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூராக அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துதல், பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துதல் போன்றவை குறித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் 26.9.2023 அன்று தேனி அம்பி வெங்கடசாமி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி டி.எஸ்.பி., பார்த்தீபன் ஆகியோர் தலைமை தாங்கினர். 


தேனி தாசில்தார் சரவணபாபு, நெடுஞ்சாலைத்துறை தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர்  சங்க பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் உள்பட வர்த்தக சங்கம், ஓட்டல் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கண்ட நகர் பகுதி சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

சதிஷ், இணை ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments