Skip to main content

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் வேவ்ஸ்-23 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ்-23 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கி கலை மற்றும் பண்பாட்டு விழாவினை துவக்கி வைத்தார். உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் C.மதளைசுந்தரம் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.



இந்த கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழாவில் நாட்டுப்புற நடனம், பாட்டு போட்டி, கவிதை போட்டி, நடனப்போட்டி குறும்படம், தெருக்கூத்து, மல்டிமீடியா, தற்காப்பு கலைகள், பேஸ் பெயின்டிங், ஸ்னோபகிராபி, மெகந்தி போட்டி, பொக்கை மேக்கிங், ஆர்ட் புறம் வேஸ்ட், ஸ்பெல் பீ, புதையல் வேட்டை, சிகை அலங்காரம், வெஜிடபிள் அல்லது புரூட் கார்விங், கார்பன் ஆர்ட், குசைன் மாஸ்டர். கிளாஸ் பெயின்டிங், கொலோஜ். ஆன் ஸ்டேஜ் ஓடிசி, இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் பிரிவல்ஸ், டாக் ஆன் எஸ்பாட்ஸ் போன்ற 20 வகையான கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரிதுணை முதல்வர்கள் N.மாதவன், டாக்டர்.M.சத்யா. வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர். C.கார்த்திகேயன். பேராசிரியர் டாக்டர் M.பாண்டி மகாராஜன், பேராசிரியர் L.S.விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் டாக்டர். E.ஆனந்தகிருஷ்ணன், பேராசிரியர் N.நாகரத்தினம், செய்திருந்தனர். முடிவில் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் J.மதளைராஜ் நன்றி கூறினார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments