தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ்-23 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கி கலை மற்றும் பண்பாட்டு விழாவினை துவக்கி வைத்தார். உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் C.மதளைசுந்தரம் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரிதுணை முதல்வர்கள் N.மாதவன், டாக்டர்.M.சத்யா. வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர். C.கார்த்திகேயன். பேராசிரியர் டாக்டர் M.பாண்டி மகாராஜன், பேராசிரியர் L.S.விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் டாக்டர். E.ஆனந்தகிருஷ்ணன், பேராசிரியர் N.நாகரத்தினம், செய்திருந்தனர். முடிவில் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் J.மதளைராஜ் நன்றி கூறினார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments