Skip to main content

தேனி அருகே நோபல் உலக சாதனை சிலம்ப போட்டி: 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தேனி தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை, தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலைக்கழகம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் சார்பில்  நோபல் உலக சாதனை சிலம்பம் போட்டி தேனி தாலுகா பகுதியில் உள்ள ஸ்ரீரெங்காபுரத்தில் 24.9.2023 அன்று நடைபெற்றது. போட்டிக்கு வைகை அரிமா தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ரவி, மண்டல தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா இளங்கோ தொடங்கி வைத்தார். 


இந்த போட்டியில் சிலம்பத்தில் நமது பாரம்பரிய உடை உடுத்தி 3 மற்றும் 4 வீடு பாட முறையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியினை தொடர்ந்து 5 அடி உயர நாற்காலியில் வேல்கம்பு சுற்று முறை 3 மணிநேரமும், கண்களை கட்டிக்கொண்டு 3 மணிநேரம், தீப்பந்த சிலம்பமும்  சுற்றி தனித்திறன் நோபல் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

போட்டியில் சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், கோயம்புத்தூர் உள்பட 7 மாவட்டங்களில் இருந்து 250 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 3 மாணவர்கள் தனித்திறன் நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டிகள் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை சிலம்ப ஆசான் ஈஸ்வரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

சதிஷ், இணை ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments