கூடலூர் நகராட்சி 15-வது வார்டு மற்றும் கூடலூர் நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு, வ.உ சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சித்த மருத்துவ முகாம் சங்கமம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. முகாமிற்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கம்பம் வட்டார அரசு சித்த மருத்துவர் சிராஜுதீன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி பரிசோதனை மேற்கொண்டார்.
முகாமில் சுருளிப்பட்டி அன்பு ராஜா, 15-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் தேவதர்ஷினி விக்னேஸ்வரன் மற்றும் அருந்ததியர் சமுதாய தலைவர், செயலாளர், பொருளாளர், இதர பொறுப்பாளர்கள் அனைத்து கட்சி நண்பர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் வசந்த், சரண்யா, பிரியங்கா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments