தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் புராடக்ட் எக்ஸ்போ மற்றும் அறிவியல் தின விழா 23.9.23 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி அவர்கள் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் டாக்டர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் C.மதளைசுந்தரம் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானி டாக்டர்.R.S.கண்ணு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் மாணவர்கள் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய வேண்டுமென்றும், இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை இருப்பினும் குறைந்த அளவு இளம் விஞ்ஞானிகளே உள்ளனர். எனவே ஆராய்ச்சி மற்றும் மேம்ப்பாட்டு துறையை மேம்படுத்த வேண்டுமென்றும், சந்திராயன் -3 வெற்றி பெற்றதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமே சாத்தியப்பட்டது என்றும். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தன்னிறவு பெற்று குறைந்த தொழில்நுட்ப செலவில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்களை 431 அனுப்பியுள்ளதென்றும். ராக்கெட் பரிசோதனைகள் பற்றியும், மங்கல்யான். ஆதித்யா, சந்திராயன் ஆகிய திட்டங்களின் சாரம்சங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்களின் பங்கு, கிரேயாஜனிக் இன்ஜின் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றை பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடி இந்திய விண்வெளி நிறுவனத்தின் பணிகள் குறித்தும் அங்கு பணிபுரிவதற்கான வழிமுறைகள் ஆராய்ச்சி குறித்தும் மாணவர்களிடையே விளக்கினார். புராடக்ட் எக்ஸ்போ அறிவியல் கண்காட்சி அறிக்கையினை இயந்திரவியல் துறையின் துறைத்தலைவர் டாக்டர்.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் சமர்பித்தார்.தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் துறை வாரியாக மாணவர்களின் கண்டுபிடிப்புகளை தொடங்கி வைத்தனர். மேலும் கட்டிடவியல் துறையின் மாணவ ன, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை தேனி N.R.K பில்ட் & டிசைன்ஸ் பொறியாளர் K.ராஜேஷ் அவர்களும், இயந்திரவியல் துறையின் அறிவியல் படைப்புகளை சென்னை இந்துஜா டெக் டிசைன் இன்ஜினியர் A.ராஜா கிரிஸ்டோபர் மற்றும் சென்னை கேட்டர் பில்லர் நிறுவனத்தின் பொறியாளர் R.சரவணன் அவர்களும். எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் அறிவியல் படைப்புகளை சிவகாசி AAA பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் பேராசிரியர் அவர்களும் தேர்வு செய்தனர். டாக்டர்.S.சுகன்யா எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறையின் அறிவியல் படைப்புகளை சிவகாசி AAA பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் பேராசிரியர் டாக்டர் ஜெயஹரி பிரபு அவர்களும், விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் நிஷாராணி தேர்வு செய்தனர்.
அதுபோல கணிணி மற்றும் அறிவியல் துறையின் அறிவியல் படைப்புகளை விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியின் கணிணி மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் R.ரம்யா மற்றும் சென்னை ஜோஹோ பன்னாட்டு நிறுவனத்தின் வெப் டெவலப்பர் M.சுபாஷ் ஆகியோர் தேர்வு செய்தனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் அறிவியல் படைப்புகளை சென்னை டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சிஸ்டம் இன்ஜினியர் M.காசி விசாலாட்சி ஆகியோர் பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். இந்த அறிவியல் கண்காட்சியில் கல்லூரியின் அனைத்துத் துறைகளிலிருந்தும் 154 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. ஒவ்வொரு துறைகளிலிருந்தும் சிறந்த 3 அறிவியல் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிதனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் N. மாதவன், டாக்டர்.M.சத்யா வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் C.கார்த்திகேயன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் கணிணி பொறியியல் துறையின் தலைவர் J.மதளைராஜ் நன்றி கூறினார்.
சதிஷ், இணை ஆசிரியர்
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments