Skip to main content

Posts

Showing posts from August, 2023

தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நடந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் குறித்து சட்டபேரவை மனுக்கள் குழுவினரிடம் கோரிக்கை மனு

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தென் மண்டல செயலாளர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் தலைமையில் மத்திய அரசு கொண்டு வரும் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெயபாரதி, ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் பாண்டி மணி, சுரேஷ் உள்பட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நவீன முறையில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி வரப்பெற்ற மனுக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழுவினர் அரசு தலைமை  கொறடா, மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் தலைமையில் வந்தனர்.  அந்த சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரிடம் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர...

போடி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்வு நாளை நடக்கிறது: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டம்,  தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நாளை 1.9.2023 அன்று போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு “மாபெரும் தமிழ் கனவு” சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறது.  அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரியிலும், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில்  தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை சொற்பொழிவு நிகழ்வில் “தென்மேற்க...

தேனி மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான  மனுக்கள் குழுத்தலைவர்  அரசு தலைமை கொறடா மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்  முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் முன்னிலையில் கருவேல்நாயக்கன்பட்டியில் தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் சுத்திகரிப்பு நிலையம், குன்னூரில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, வைகை அணை அருகிலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, சோத்துப்பாறை அருகில் வாய்க்கால் பாலம் சீரமைப்பு பணி, பெரியகுளம் தலைமை மருத்துவமனை, லட்சுமிபுரம் மாவட்ட தலைமை நீதிமன்றம் முன்பு உள்ள நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் அவர்கள் (கடலூர்), ப.கார்த்திகேயன் அவர்கள் (வேலூர்), மு.பாபு அவர்கள்  (செய்யூர்), கே.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்),  வை.முத்துராஜா அவர்கள் (புதுக்கோட்டை) மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அவர்கள் ஆகியோர்  31.8.2023 அன்று  பார்வையிட்டு ஆய்வு மே...

மதுரை, சிவகங்கை பகுதியில் கனிமொழி எம்.பி., மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு பயணத்தின் ஒரு பகுதியாக, அரசு பள்ளி மாணவர்களுக்காக  செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து 30.8.2023 அன்று மதுரையில் உள்ள சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இதேபோன்று 29.8.2023 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அருங்காட்சியகத்தையும், கொந்தகை, கீழடி பகுதியில் அமைந்திருக்கும் அகழ்வாய்வு இடங்களையும் தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்  சீனிவாசன், உதவி ஆசிரியர் 

தேனியில் கலெக்டர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை நாடார் சரஸ்வதி கலை கல்லூரி மாணவிகள் பிடித்தனர்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினம் – 2023 முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக  கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மாரத்தான்  போட்டியினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் 30.8.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வினை மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில 200-க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  இந்த மாரத்தான் போட்டியில் தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி* மாணவியர்கள் I - R.Monika - ₹10,000 II - P.Nandhini - ₹7,000 III - K.Shymala- ₹5000 VII-S.Harishma- ₹1000 முத...

தேனி மாவட்டத்தில் 31-ந் தேதி சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்: கலெக்டர் ஷஜீவனா தகவல்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான  மனுக்கள் குழு 31.08.2023 அன்று குழுதலைவர் /அரசு தலைமை கொறடா  சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் திருவிடைமருதூர் (தனி) தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தேனி மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூட்டரங்கில் அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளனர். இந்த குழுவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான  மனுக்கள்  குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன்  திருவிடைமருதூர் (தனி) தலைமையில்,  குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் (கடலூர்), வி.பி.கந்தசாமி  (சூலூர்), ப. கார்த்திகேயன்   (வேலூர்), செ.சுந்தரராஜன் (சங்ககிரி), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூர்), மு.பாபு (செய்யூர்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), வை.முத்துராஜா (புதுக்கோட்டை),      ...

மதுரையில் கனிமொழி எம்.பி., மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மண்பாண்டப பொருட்கள் செய்யும் கூடத்தில் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுப் பயணமாக 29.8.2023 அன்று மதுரை - திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரி ஊராட்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் மண்பாண்ட பொருட்கள் செய்யும் கூடத்தை பார்வையிட்டனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மண்பாண்டங்கள், களிமண் சிலைகள், பொம்மைகள், அகல்விளக்கு உள்ளிட்ட பாரம்பரிய கைவினை பொருள்கள் உற்பத்தி செய்யும் சுய உதவி குழுக்களை சந்தித்தனர்.  இதனைத்தொடர்ந்து, கைவினை கலைஞர்களின் கோரிக்கை மனுக்களைக் கனிமொழி எம்.பி. பெற்றுக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி மண்பாண்ட பொருட்களுக்கு புகழ் பெற்றது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினைஞர் குடும்பங்கள் உள்ளன. இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். கஞ்சிக்கலயம் முதல் கலைநயமிக்க சுவாமி சிலைகள் தரை கைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்  

தேனியில் மாவட்ட அளவிலான உணவு தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் : சிப்காட் நிர்வாக இயக்குநர் பி.ஆகாஷ் பங்கேற்பு

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில்  சிப்காட் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவிலான  உணவு  தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர்        ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் சிப்காட் நிர்வாக இயக்குநர் பி.ஆகாஷ்  முன்னிலையில் 29.8.2023 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்,ட கலெக்டர் பேசுகையில், தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  பெரும்பாலான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகளை  மேம்படுத்தி தேனி மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மாவட்டத்தில் மெகா உணவு பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தேனி வட்டத்திற்குட்பட்ட  தேனியிலிருந்து கம்பம் செல்லும் பிரதான சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உப்பார்பட்டி, பூமலைக்குண்டு மற்...

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்திப்பூ கோலிமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன். உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், டாக்டர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த...

தேனி மாவட்டத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு எஸ்.பி.,-யிடம் கோரிக்கை

தேனி மாவட்ட சிவசேனா (UBT) கட்சியின் கலந்தாய்வு கூட்டம் 28.8.2023 அன்று தேனி-பெ ரியகுளம் சாலையில் உள்ள தனியார் விடுதியில்  மாநில தலைவர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி தேனி மாவட்ட தலைவர் கருப்பையா, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் குரு ஐயப்பன் கூட்டத்தை வழி நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு யுவசேனா ஒருங்கிணைப்பாளர் மும்பை ஸ்டாலின் அவர்களும், சிவசேனா மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.  கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிக சீரும், சிறப்புமாக நடத்துவது என்றும், தேனி மாவட்டத்தில் சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது என்றும், தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் திருக்கோவில் நந்தி சிலை விசயத்தில் சிவசேனா கட்சியினர் தலையிடக்கூடாது என்று தொலைபேசி மூலம் மாநில செயலாளர் குரு ஐயப்பன் அவர்களை மிரட்டும் விதமாக பேசிய தி.மு.க பிரமுகருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட...

தேனி மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு படைவீரர் கொடி நாள் வசூல் இலக்கினை பூர்த்தி செய்த போக்குவரத்து ஆர்.டி.ஓ., மற்றும் ஏ.டி., மய்ன்ஸ் ஆகியோருக்கு வெள்ளி பதக்கம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 28.8.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 303 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனை பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள்  என மொத்தம் 303 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். முன்னதாக முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் 2020-ஆம் ஆண்டிற்கு ரூ.3,60,000- வசூல் செய்து இலக்கினை பூர்த்தி செய்தமைக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் க.செல்வக்குமார் என்பவருக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது  ரூ.5,00,000- வசூல் செய்தமைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் வினோத் என்பவருக்கும் தலைமை செயலாளரின் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 30 கிராம் வெள்ளி பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ...

விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் விரதம் இருந்து சிலை ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும்: தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சியில் முடிவு

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி 27.8.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொதுச்செயலாளர் மாய.லோகநாதன் தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வழிகாட்டினர். நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீர்மானம் (1) தேனி மாவட்டம் முழுவதும் இந்து எழுச்சி முன்னணி சார்பாக நடத்தக்கூடிய விநாயகர் ஊர்வலத்தை மாவட்ட காவல்துறையின் வழிகாட்டுதலோடு அமைதியான முறையில் நடத்துவது என்றும்  தீர்மானம் (2) விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் விரதமிருந்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் (3) விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் தினசரி சந்தித்து  விநாயகர் புராணம் விநாயகர் அகவல் வாசிக்க வேண்டும் என்றும் தீர்மானம் ( 4) நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி புதிய சரித்திர சாதனை புரிந்த நமது பாரத விஞ்ஞானி...

தேனி மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ., எழுத்து தேர்வில் 604 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தீயணைப்பு சேவை மற்றும் மீட்பு பொது ஆட்சேர்ப்பிற்கான எழுத்துத்தேர்வு 26.8.2023 அன்று நடந்தது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு காவல் துறை சார்பு ஆய்வாளர் (தாலுகா. ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தீயணைப்பு சேவை மற்றும் மீட்பு பொது ஆட்சேர்ப்பிற்கான எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் வாயிலாக கடந்த 1.6.2023 முதல் 30.6.2023 வரை தமிழ்நாடு அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விண்ணப்பித்தவர்களில் 3,488 பேர் மட்டும் (2844 +644) தேனி மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.  அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று 26.08.2023 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது அறிவு சம்மந்தப்பட்ட தேர்வு தொடங்கி 12.30 மணிவரையும் மதியம் 15.30 முதல் 17.10 வரை தமிழ் தகுதித்தேர்வும் (தாள் 1 மற்றும் 2 முறையே நடைபெற்றது. மேற்படி தேர்வில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 2,367 ஆண்கள் 517 பெண்கள் என மொத்தம் 2,884 பேர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்....

தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

  தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரை, வடுகபட்டி தேவதானப்பட்டி ஆகிய பேரூராட்சி  பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 26.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில்  தென்கரை பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹவுசிங் போர்டு காலனியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளையும், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகளையும், கைலாசப்பட்டி 12-வது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டுமான பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் காலனியில் ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் பணிகளையும் பாரதி நகரில் ரூ.14 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று வடுகபட்டி பேரூராட்சி பகுதியி...

புனித வளன் பள்ளி வெள்ளி விழாவில் கலைஞர் பற்றி குட்டி ஸ்டோரி சொன்ன கனிமொழி கருணாநிதி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில், புனித வளன் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா 25.8.2023 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் வண்ண வண்ண உடையில் கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கியம், நாட்டுப்பற்று என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து விழாவில் கனிமொழி எம்.பி., சிறப்புரையாற்றினார்.அதில் கலைஞர் பற்றி குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார்.அப்போது கனிமொழி எம்.பி பேசுகையில், என்னுடைய தந்தை கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார். அவர் வாழ்க்கையில் பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. தோல்வி வரும் பொது அவர் என்றுமே துவண்டு போனது இல்லை. ஒரு தேர்தல் தோல்வி பிறகு அது நாள் அடுத்த வேலை என்ன, அடுத்த தேர்தலுக்கான பணி என்ன? என்று தான் சிந்திப்பதை தவிர, இந்த தேர்தல் முடிவு என்பது நமக்கு ஏற்றதாக இல்லை, மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. அதனால் வீட்டிலேயே உட்கார்ந்து கொ...

தேனி மாவட்டத்தில் 426 பள்ளிகளில் 22,712 மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, அவர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன் முன்னிலையில் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து  உணவு உட்கொண்டனர்.இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், அவர்கள் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு மாதிரிப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர். கிராம பகுதிகளிலும், நகர பகுதிகளிலும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதன் காரணமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கா...