Skip to main content

தேனி மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு படைவீரர் கொடி நாள் வசூல் இலக்கினை பூர்த்தி செய்த போக்குவரத்து ஆர்.டி.ஓ., மற்றும் ஏ.டி., மய்ன்ஸ் ஆகியோருக்கு வெள்ளி பதக்கம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 28.8.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 303 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனை பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள்  என மொத்தம் 303 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் 2020-ஆம் ஆண்டிற்கு ரூ.3,60,000- வசூல் செய்து இலக்கினை பூர்த்தி செய்தமைக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் க.செல்வக்குமார் என்பவருக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது  ரூ.5,00,000- வசூல் செய்தமைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் வினோத் என்பவருக்கும் தலைமை செயலாளரின் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 30 கிராம் வெள்ளி பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். இதனைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் ஏழை முஸ்லீம் பெண்கள் சிறுதொழில் செய்வதற்காக தலா ரூ.7,500- வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.75000-க்கான காசோலைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முகமதுஅலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

சரவணன், சிறப்பு நிருபர் 

Comments