Skip to main content

தேனி மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ., எழுத்து தேர்வில் 604 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தீயணைப்பு சேவை மற்றும் மீட்பு பொது ஆட்சேர்ப்பிற்கான எழுத்துத்தேர்வு 26.8.2023 அன்று நடந்தது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு காவல் துறை சார்பு ஆய்வாளர் (தாலுகா. ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தீயணைப்பு சேவை மற்றும் மீட்பு பொது ஆட்சேர்ப்பிற்கான எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் வாயிலாக கடந்த 1.6.2023 முதல் 30.6.2023 வரை தமிழ்நாடு அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விண்ணப்பித்தவர்களில் 3,488 பேர் மட்டும் (2844 +644) தேனி மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 

அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று 26.08.2023 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது அறிவு சம்மந்தப்பட்ட தேர்வு தொடங்கி 12.30 மணிவரையும் மதியம் 15.30 முதல் 17.10 வரை தமிழ் தகுதித்தேர்வும் (தாள் 1 மற்றும் 2 முறையே நடைபெற்றது. மேற்படி தேர்வில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 2,367 ஆண்கள் 517 பெண்கள் என மொத்தம் 2,884 பேர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வில் 477 ஆண்கள், 127 பெண்கள் என மொத்தம் 604 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 1. காவல் துணை கண்காணிப்பாளர்கள் 3. ஆய்வாளர்கள் - 24, சார்பு ஆய்வாளர்கள் - 54. பயிற்சி சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் - 46, ஆளினர்கள் -293. ஆயுதப்படையினர் - 31. ஊர்காவல் படையினர் - 157 பேர் மற்றும் தனிப்பிரிவினர் ஆக மொத்தம் 618 பேர் தேர்வு மையம் மற்றும் பாதுகாப்பு அலுவலுக்கு பயன்படுத்தப்பட்டனர். மேலும் தேனி மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை தணிக்கை செய்ய சென்னை காவலர் பயிற்சி கல்லூரி, பயிற்சி துறை தலைவர் தமிழ்சந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை நேரடியாக பார்வையிட்டார். மேற்கண்ட தகவலை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments