Skip to main content

தேனியில் கலெக்டர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை நாடார் சரஸ்வதி கலை கல்லூரி மாணவிகள் பிடித்தனர்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினம் – 2023 முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக  கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மாரத்தான்  போட்டியினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் 30.8.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வினை மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில 200-க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 


இந்த மாரத்தான் போட்டியில் தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி* மாணவியர்கள்

I - R.Monika - ₹10,000

II - P.Nandhini - ₹7,000

III - K.Shymala- ₹5000

VII-S.Harishma- ₹1000 முதல் மூன்று இடத்தை தக்க வைத்து ரொக்க பரிசாக ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 பெற்றுள்ளனர். மேலும் சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா, நாடகம் மற்றும் ரீல் மேக்கிங் போட்டிகள் நடைபெறுகிறது . இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. ஏ.டி.போஸ்கோ ராஜா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் முகமது பாரூக், தேனி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், மாவட்ட  விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 


Comments