Skip to main content

மதுரையில் கனிமொழி எம்.பி., மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மண்பாண்டப பொருட்கள் செய்யும் கூடத்தில் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுப் பயணமாக 29.8.2023 அன்று மதுரை - திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரி ஊராட்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் மண்பாண்ட பொருட்கள் செய்யும் கூடத்தை பார்வையிட்டனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மண்பாண்டங்கள், களிமண் சிலைகள், பொம்மைகள், அகல்விளக்கு உள்ளிட்ட பாரம்பரிய கைவினை பொருள்கள் உற்பத்தி செய்யும் சுய உதவி குழுக்களை சந்தித்தனர். 


இதனைத்தொடர்ந்து, கைவினை கலைஞர்களின் கோரிக்கை மனுக்களைக் கனிமொழி எம்.பி. பெற்றுக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி மண்பாண்ட பொருட்களுக்கு புகழ் பெற்றது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினைஞர் குடும்பங்கள் உள்ளன. இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். கஞ்சிக்கலயம் முதல் கலைநயமிக்க சுவாமி சிலைகள் தரை கைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.



சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்  


Comments