தேனி மாவட்டம், தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நாளை 1.9.2023 அன்று போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு “மாபெரும் தமிழ் கனவு” சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரியிலும், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை சொற்பொழிவு நிகழ்வில் “தென்மேற்கு பருவக்காற்றும் தீந்தமிழ் வீச்சும்” என்னும் தலைமைப்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகிநடராஜ் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள் என மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments