தேனி மாவட்டத்தில் 31-ந் தேதி சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்: கலெக்டர் ஷஜீவனா தகவல்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மனுக்கள் குழு 31.08.2023 அன்று குழுதலைவர் /அரசு தலைமை கொறடா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் திருவிடைமருதூர் (தனி) தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தேனி மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூட்டரங்கில் அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளனர்.
இந்த குழுவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் திருவிடைமருதூர் (தனி) தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் (கடலூர்), வி.பி.கந்தசாமி (சூலூர்), ப. கார்த்திகேயன் (வேலூர்), செ.சுந்தரராஜன் (சங்ககிரி), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூர்), மு.பாபு (செய்யூர்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), ஆர்.ராதாகிருஷ்ணன் (விருத்தாச்சலம்), மு.ஜெகன்மூர்த்தி (கீழ்வைத்திணான் குப்பம்), ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள் என தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments