Skip to main content

தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நடந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் குறித்து சட்டபேரவை மனுக்கள் குழுவினரிடம் கோரிக்கை மனு

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தென் மண்டல செயலாளர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் தலைமையில் மத்திய அரசு கொண்டு வரும் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெயபாரதி, ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் பாண்டி மணி, சுரேஷ் உள்பட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதற்கிடையே தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நவீன முறையில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி வரப்பெற்ற மனுக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழுவினர் அரசு தலைமை  கொறடா, மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் தலைமையில் வந்தனர். 

அந்த சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரிடம் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் அவர்கள் மத்திய அரசு புதிதாக தாக்கல் செய்துள்ள சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் தேனி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கோரிக்கை குறித்த மனுவினை அளித்தார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

சரவணன், சிறப்பு நிருபர் 

Comments