Skip to main content

தேனி மாவட்டத்தில் 426 பள்ளிகளில் 22,712 மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, அவர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன் முன்னிலையில் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து  உணவு உட்கொண்டனர்.இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், அவர்கள் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு மாதிரிப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.
கிராம பகுதிகளிலும், நகர பகுதிகளிலும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதன் காரணமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.9.2022 அன்று கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் 51  தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கின்ற 2,633 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட காரணத்தினால் 20.3.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டன்ற பேரவை கூட்டத்தொடரில் காலை உணவுத்திட்டத்தினை மேலும் 1,937 தொடக்கப் பள்ளிகளில் வரும் நிதியாண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 310 பள்ளிகளில் பயிலும் 16,173 மாணவ, மாணவியர்களும் ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 52 பள்ளிகளில் பயிலும் 2,467 மாணவ, மாணவியர்களும், நகராட்சி பகுதிகளில் 40 பள்ளிகளில் பயிலும் 2,106 மாணவ, மாணவியர்களும், நகர் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் பயிலும் 1,966 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும்  22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. காலை உணவுத்திட்டத்தில் திங்கள் கிழமை ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை ரவா காய்கறி கிச்சடியுடன் காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடியுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும். இந்த காலை உணவுத்திட்டத்தினை சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் தயாரிக்க உள்ளனர். இவர்கள் காலை 6 மணிக்கு பணிகளை தொடங்கி 8.15 மணிக்குள் உணவுகளை தயார் செய்யவார்கள். 8.15 மணியிலிருந்து 8.45 மணிக்குள் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும். மாணவ, மாணவியர்களுக்கு காலை 8.30 மணியிலிருந்து 9 மணிக்குள் சுவையான மற்றும் தரமான உணவுகள் பரிமாறப்படும். ஊரகப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பெரியகுளத்தில் 35 பள்ளிகளில் பயிலும் 3,110 மாணவ, மாணவியர்களுக்கும், ஆண்டிபட்டி பகுதியில் 91 பள்ளிகளில் பயிலும் 4,628 மாணவ, மாணவியர்களுக்கும், க.மயிலாடும்பாறை பகுதியில் 68 பள்ளிகளில் பயிலும் 3,113  மாணவ, மாணவியர்களுக்கும், தேனி 24 பள்ளிகளில் பயிலும் 1,328 மாணவ, மாணவியர்களுக்கும், போடிநாயக்கனூர் பகுதியில் 32 பள்ளிகளில் பயிலும் 1,465 மாணவ, மாணவியர்களுக்கும், சின்னமனூர் பகுதியில் 31 பள்ளிகளில் பயிலும் 1,438 மாணவ, மாணவியர்களுக்கும், உத்தமபாளையம் பகுதியில் 18 பள்ளிகளில் பயிலும் 636 மாணவ, மாணவியர்களுக்கும், கம்பம் பகுதியில் 11 பள்ளிகளில் பயிலும் 455 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 310 ஊரக பகுதிகளில் உள்ள 16,173 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர். அதுபோல ஊரகப்பகுதியை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதி பள்ளிகள், ஆண்டிபட்டியில் 6 பள்ளிகளில் பயிலும் 434 மாணவ, மாணவியர்களுக்கும், மேலசொக்கநாதபுரத்தில் 1 பள்ளியில் பயிலும் 12  மாணவ, மாணவியர்களுக்கும், ஓடைப்பட்டியில் 6 பள்ளிகளில் பயிலும் 172 மாணவ, மாணவியர்களுக்கும், அனுமந்தன்பட்டியில் 2 பள்ளிகளில் பயிலும் 25 மாணவ, மாணவியர்களுக்கும், க.புதுப்பட்டியில் 3 பள்ளிகளில் பயிலும் 115 மாணவ, மாணவியர்களுக்கும், ஹைவேவிஸ் பகுதியில் 2 பள்ளிகளில் பயிலும் 16 மாணவ, மாணவியர்களுக்கும், காமயகவுண்டன்பட்டியில் 3 பள்ளிகளில் பயிலும் 178 மாணவ, மாணவியர்களுக்கும், கெங்குவார்பட்டியில் 5 பள்ளிகளில் பயிலும் 396 மாணவ, மாணவியர்களுக்கும், தேவதானப்பட்டியில் 7 பள்ளிகளில் பயிலும் 367 மாணவ, மாணவியர்களுக்கும், தென்கரையில் 1 பள்ளியில் பயிலும் 18 மாணவ, மாணவியர்களுக்கும், வீரபாண்டியில் 5 பள்ளிகளில் பயிலும் 362 மாணவ, மாணவியர்களுக்கும், பண்ணைப்புரத்தில் 4 பள்ளிகளில் பயிலும் 130 மாணவ, மாணவியர்களுக்கும், கோம்பையில் 4 பள்ளிகளில் பயிலும் 174 மாணவ, மாணவியர்களுக்கும், தேவாரத்தில் 2 பள்ளிகளில் பயிலும் 35 மாணவ, மாணவியர்களுக்கும், உத்தமபாளையத்தில் 1 பள்ளியிலும் பயிலும் 33 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 52 ஊரக பகுதியை ஒட்டியுள்ள பேரூராட்சி பள்ளிகளில் பயிலும் 2,467 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர். 


இதனை போன்று நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் பெரியகுளத்தில் 4 பள்ளிகளில் பயிலும் 132 மாணவ, மாணவியர்களுக்கும், தேனி அல்லிநகரத்தில் 6 பள்ளிகளில் பயிலும் 265 மாணவ, மாணவியர்களுக்கும், போடிநாயக்கனூரில் 5 பள்ளிகளில் பயிலும் 146  மாணவ, மாணவியர்களுக்கும், சின்னமனூரில் 9 பள்ளிகளில் பயிலும் 320 மாணவ, மாணவியர்களுக்கும், கம்பம்  நகராட்சி பகுதியில்            16 பள்ளிகளில் பயிலும் 1,243 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் நகராட்சி பகுதியில் உள்ள 40 பள்ளிகளில் பயிலும் 2,106 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர்.நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள பேரூராட்சி பள்ளிகளில் பெரியகுளம் நகராட்சியை ஒட்டியுள்ள வடுகபட்டி, தாமரைக்குளம், தென்கரை பேரூராட்சியில் 6 பள்ளிகளில் பயிலும் 401 மாணவ, மாணவியர்களுக்கும்,                    தேனி-அல்லிநகரம் நகராட்சியை ஒட்டியுள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 3 பள்ளிகளில் பயிலும் 310  மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சியை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 7 பள்ளிகளில் பயிலும் 437  மாணவ, மாணவியர்களுக்கும், சின்னமனூர் நகராட்சியை ஒட்டியுள்ள மார்க்கையன்கோட்டை, குச்சனூர், உத்தமபாளையம் பேரூராட்சியில் 8 பள்ளிகளில் பயிலும் 818 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 24 நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள பேரூராட்சி பள்ளிகளில் பயிலும் 1,966 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர். 


இவற்றில் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மதுமதி, மகளிர் திட்ட அலுவலர் ரூபன்சங்கர் ராஜ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரகாஷ்,  முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகர்மன்ற துணைத்தலைவர் சுனோதா செல்வகுமார், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் வக்கீல் செல்வம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், நகராட்சி ஆணையாளர் கணேசன், போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 



அதுபோல போடிநாயக்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா நடேஷ் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோன்று தேனி- அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை நகராட்சி 33-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் எஸ்.கடவுள் தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டி செல்வி மற்றும் பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.
R.பாண்டியன், உதவி ஆசிரியர்

R.ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments