Skip to main content

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் அமைப்பு சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது

தேனி, ஜூன்.5 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் தன்னார்வ குழு சார்பில் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகை தந்த அனைத்து மகளிருக்கும் மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் குழு சார்பாக இந்திராணி, வனிதா, சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருது பெற்ற சுருளிப்பட்டி அன்பு ராஜா பேசுகையில், பூமி உங்களுக்காக செய்த உதவிக்கு நீங்கள் செய்யும் கைமாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இருப்பது, நாளைய சந்ததி வலம் பெற சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்து விடுவோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்திடுவோம், பொது போக்குவரத்தை ஊக்கி வைப்போம், நாம் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கழிவுகளை பிரித்து எடுத்து பணப்பலன் பெற்றிடுவோம் என்று விழிப்புண்வை ஏற்படுத்தி பேசினார்.

இதனைஅடுத்து சுற்றுச்சூழல் தினத்தை நினைவு கூறும் வகையில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

.............................

நாகராஜ், தலைமை நிருபர் 



Comments

Anonymous said…
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய நிகழ்வை சுக்கிரன் நியூஸ் செய்தியில் வெளியிட்டு உலகம் அறிய செய்த சுக்கிரன் நியூஸ் செய்தி நிருபருக்கு அன்பு அறம் செய் அமைப்பின் சார்பாக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🌏