தேனி, ஜூன்.4-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 4.6.2025 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேனி நகர தலைவர் சிவராம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய லோகநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் இராமராஜ் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
இந்து எழுச்சி முன்னணி ஆண்டு திட்டங்களின்படி, எதிர்வரும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் வகையில் திட்டமிடுவதும், செயல்படுவதும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2:
இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்களில் விளக்கேற்றம் இல்லாத நிலை காணப்பட்டால், அங்கு விளக்கேற்றும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3:
பொறுப்பாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்களின் குறைகளை முன்வைத்து, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4:
இளம் தலைமுறையினர் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும். மேலும், அவர்கள் நல்ல வாழ்க்கை நடத்த வழிகாட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி நன்றி கூறினார்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments