Skip to main content

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி தாலுகா பகுதியி்ல் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு

 

தேனி, ஜூன்.19-

தேனி மாவட்டம், தேனி தாலுகா பகுதியில் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,  தேனி வட்டாட்சியர் அலுவலகம்,  உழவர் சந்தை,  ஆரம்ப சுகாதார நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கள்ளர்  நடுநிலைப்பள்ளி மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து    மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், 18.6.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் அனைத்து                                      நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்றும்,  மக்களை நாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அரசு இயந்திரம் முழுவதுமாக களத்திற்கே வந்து செயல்படும் உங்களைத்தேடி, உங்கள் ஊரில்  என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்படி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாதந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தேனி வட்டத்தில்,  தேனி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துறை அலுவலர்கள் நேரடியாக  களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். 

அதனைத்தொடர்ந்து,  தோட்டக்கலைத்துறையின் சார்பில்  நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.1,47,715/- மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கான பணி ஆணையினையும், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.12,000/- மதிப்பிலான தக்காளி குழிதட்டு நாற்றுகளை ஒரு பயனாளிக்கும்,  மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ்  ரூ.6000/- மதிப்பிலான தென்னங்கன்றுகள்          ஒரு பயனாளிக்கும் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதன் பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 
இதனை அடுத்து தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட மைய நூலகத்தின் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.    

இதனைத்தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் குழுக்களின் பொம்மைகள், வாழை இலைத்தட்டு, துணிப்பைகள்  மற்றும் அப்பளம் உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில்  பார்வையிட்டு, விற்பனை குறித்து கேட்டறிந்தார்.  

அதன் பின்னர் தேனி உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும் உழவர் சந்தையில் சேதமடைந்த நிலையிலுள்ள சுற்றுச் சுவரினை உடனடியாக சரிசெய்திடுமாறு  வேளாண்துறை அலுவலர்களுக்கு  கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது உழவர் சந்தைக்கு பேருந்து இயக்கத்தினை துவக்கி வைத்தமைக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தேனி உழவர் சந்தை அருகில் உள்ள மீறு சமுத்திர கண்மாயினை பார்வையிட்டு,  தூர் வாரும் பணிகள்  மற்றும் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து துறை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடினார்.  மேலும், கரை ஓரங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். 

இதனை அடுத்து அல்லிநகரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, படுக்கை வசதி, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்டவைகள்  குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பிற பொருட்களை நேரில் பார்வையிட்டு,  e-NAM திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் வேளாண் விளைப் பொருள்கள் குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை கூட செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேனி விதை பரிசோதனை மற்றும்  மண் பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, விதை, மண் மற்றும் நீர் ஆய்வு செயல்முறைகளை நேரடியாக பார்வையிட்டார்.

அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்து கேட்டறிந்தார். 
மேலும், கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடையில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவிடும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
இதனைத்தொடர்ந்து பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவருந்தினார்.  
அதன் பின்பு தேனியில் உள்ள அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மறுவாழ்வு மையத்தில்  அடிப்படை வசதிகள், பணியாளர்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும்,  முறையாக பணிகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து தேனி யூனியன் நாகலாபுரம் ஊராட்சியில் தலா ரூ.3.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 சுகாதார வளாகம் கட்டடங்களையும்,   ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடத்தையும்,  தப்புக்குண்டு பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.58.70 லட்சம்                  மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை  பணிகளையும்,  நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உப்பார்பட்டி முதல் வெங்கடாஜலபுரம் வரை  ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள சாலை விரிவாக்க பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது நாகலாபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், மருத்துவ சிகிச்சை முறைகள் காற்றோட்டமான இட வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  
அதன் பின்னர்  தேனி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை முதல் பிற்பகல் வரை துறை அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து எடுத்துரைத்தனர். 
அதனைத்தொடர்ந்து,  பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வாக, காலையில் மனு அளித்த 4 நபர்களுக்கு பட்டா மற்றும் 2 நபர்களுக்கு சாதி சான்றிதழினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். 

இந்நிகழ்வுகளில் துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக்குமார் பிரசாந்த் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலர்      ஐ.மகாலட்சுமி, பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன், உதவி வன அலுவலர் .அரவிந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மகளிர் திட்ட அலுவலர் சந்திரா, இந்திராணி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் நர்மதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வளர்மதி (வேளாண்மை), அண்ணாதுரை (சத்துணவு), மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், உதவி இயக்குநர்கள் கிறிஸ்டோபர் தாஸ் (பேரூராட்சிகள்), அப்பாஸ் (நில அளவை), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்    காமாட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி சந்தியா, தேனி  வட்டாட்சியர் சதீஸ், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மாரிமுத்து, தேனி வட்டார வளர்ச்சி அலுவலர் மக்காத்தாம்மாள், தேனி யூனியன் உதவி பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 



Comments