Skip to main content

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.49 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேனி, ஜூன்.17-

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.6.2025 அன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம். புதுமைப் பெண், தமிழ் புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் 13.49 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 578 பயனாளிகளுக்கு 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும். முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை காசோலைகள், 24 நபர்களின் குடும்பத்தினருக்கு இயற்கை மரண உதவித் தொகை காசோலைகள், விபத்துகளில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் உதவித் தொகைக்காளன காசோலைகள், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் 3 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 8 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகள். 4 பயனாளிகளுக்கு ஊரக வீடுகள் பாரமரிப்புத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆணைகள் 8 நபர்களுக்கு முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ஆணைகள், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 8.02 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டது 

அதுபோல 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 40 வயதிற்கு மேற்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்ட ஆணைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மொத்தம் 35 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள். கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கடனுதவிகள், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ஆணைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை. பொது சுகாதாரத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 851 பயனாளிகளுக்கு மொத்தம் 13.48,87,356 ரூபாய்க்கான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன். சட்டமன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர்  ஆர்.வி.டிஜீவனா, மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து தேனி-அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் 3 வழித்தடங்களுக்கான 9 சிற்றுந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்கதமிழ்செல்வன், சட்ட மன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், குக்கிரமங்கள் மற்றும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு தரமான போதிய எண்ணிக்கையிலான, குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய வகையில் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து வசதியை வழங்க புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024 இன் கீழ் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் முதல் தேனி நேரு சிலை வரை (1 மினிப்பேருந்து), தேனி-பள்ளிவாசல் முதல் கோம்பை வரை (6 மினிப்பேருந்து), ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முதல் முத்தனம்பட்டி வரை 12 மினிப்பேருந்து) என 3 வழித்தடங்களில் 9 சிற்றுந்துகள் இயக்குவதற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை இணை ஆணையர் சத்திய நாராயணன், தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
................................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 



Comments