தேனி-பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திட்டப்பணிகள் முடக்கம்: கனிமொழி எம்.பி.யிடம், அளித்த கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை. முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன் நன்றி தெரிவிப்பு
தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மற்றும். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா இறகுப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் முதியோர் நடை பயிற்சி மேடை கழிப்பறை போன்றவைகள். கடந்த 4 ஆண்டுகளாக எந்த ஒரு பயன்பாடு இன்றி அடைத்து கிடைக்கிறது.
இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள திட்டப்பணிகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் எதிரொலியாக உடனடியாக உடற்பயிற்சி கூடம் மற்றும் இறகுபந்து மைதானம் சிறுவர் பூங்கா ஆகியவை. உடனடியாக திறக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கா கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை திராவிட முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கே.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
.................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments