வீரபாண்டி தேரோட்டத்தில் முதல் மரியாதை பிரச்சனை : பேரூராட்சி தலைவர் கீதா சசி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு
தேனி, மே.10-
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் கீதா சசி அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமிடம் கோர்க்கை மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில்,
நான் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டுகளில் சிறந்த பேரூராட்சி தலைவராக மாவட்ட நிர்வாகத்தால் விருது பெற்றுள்ளேன்.
மேலும் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டத்தின் போது தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இவர்களை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் ஆகியோர்களுக்கு முதல் மரியாதை கொடுப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் என்ற முறையில் எனக்கும் மாலை மற்றும் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு 9.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்ற தேரோட்டத்தின் போது வந்திருந்த மாவட்ட கலெக்டர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு உரிய மாலை, பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவராகிய எனக்கு முதல் மரியாதை செய்யவில்லை. இதை நான் ஏன் பேரூராட்சி தலைவருக்கு செய்யவில்லை என கேட்ட போது அங்கிருந்து என்னை அலுவலகம் வரச்சொல்லி, நான் கோவில் அலுவலகம் சென்ற போது அங்கிருந்த உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நாராயாணி, கணக்கர் பாலு, பழனியப்பன், மேலகாரர் வீரமணி ஆகியோர் வேண்டுமென்றே வெறுப்புணர்வுடன் மிகவும் வன்மத்துடன் உனக்கெல்லாம் இவ்வளவு தான் மரியாதை என்று ஒருமையில் பேசினார்கள்.
இதனைத்தொடர்ந்து தேனி எம்.பி,-ஐ ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டபோது யாரை அழைக்க வேண்டும், அழைக்கக்கூடாது என எங்களுக்கு தெரியும். வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இரு என வன்மத்துடன் மோசமாக பேசி என்னை அங்கிருந்து துரத்தி விட்டார்கள்.
எனவே பேரூராட்சி தலைவர் என்றும், ஒரு பெண் என்றும் பாராமல் மிக அவதூறாக பேசிய மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோன்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்
.............................
நாகராஜ், தலைமை நிருபர்.
Comments