Skip to main content

தேனி அருகே உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா

தேனி, மார்ச்.8-

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா 7.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு கள்ளர் பள்ளிகள் உத்தமபாளையம் சரகம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார்.
போடி ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேச பாண்டியன், வட்டார கல்வி அலுவலர்கள் சம்பூர்ணப்பிரியா, ராஜமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பிரதீபா வரவேற்றார்.
விழாவில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பாலமுருகன், சந்திரசேகர், வட்டார வளமைய கணக்கர் செல்வராணி, முன்னாள் தலைமை ஆசிரியைகள் வாசுகி, சுமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினர். 
விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் போது பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
முன்னதாக பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் இடைநிலை ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினார். 

நாகராஜ், தலைமை நிருபர் 

...............................

Comments