தேனி, மார்ச்.6-
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பேரணி 6.3.2025 அன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியில் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், சங்கமம் அறக்கட்டளை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், போடி ஏ.எச்.எம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது இப்ராஹிம் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், க.புதுப்பட்டி நகர் நல கமிட்டி, உத்தமபாளையம் நகர பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி தொடர்பாக கூட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பங்கேற்றனர்.
நாகராஜ், செய்தி ஆசிரியர்
..........................
Comments