தேனி, மார்ச்.26-
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6-ந் தேதியில் இருந்து மே 13-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான மறுஏலம் 26.3.2025 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ராட்டினம் நடத்துதல் ஏலத்தை ரூ.2 கோடியே 94 லட்சம் என கோவில் நிர்வாகம் முதல் முறை ஏலத்தில் நிர்ணயித்திருந்து. இந்த தொகைக்கு ஏலம் எடுக்க யாரும் வராததால் 2-வது முறையாக நடைபெற்ற மறுஏலத்தில் ரூ.2 கோடியே 93 லட்சம் என நிர்ணயித்து ரூ.2 கோடியே 85 லட்சம் என ஏலகேள்விக்கான தொகையை முடிவு செய்தது. இந்த தொகைக்கு யாரும் ஏலக்கேள்வி கேட்கவில்லை.
இதனைத்தொடர்ந்து ராட்டினம் ஏலத்திற்கான ஒப்பந்தப்பபுள்ளி டெண்டர்க்கு 11 பேர் டெபாசிட் செலுத்தி இருந்தனர். இதில் 9 பேர் மட்டும் டெண்டர் தொகையை பூர்த்தி செய்து ஒப்பந்த புள்ளி கோரியிருந்தனர். இவற்றில் ராட்டினம் ஏலத்திற்கு ஒப்பந்தபுள்ளி டெண்டரில் அதிகபட்ச ஒப்பந்தபுள்ளி தொகையாக ரூ.3 கோடியே 6 லட்சம் என பூர்த்தி செய்து தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயராஜன் என்பவர் ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகராஜ், தலைமை நிருபர்
.......................
Comments